Followers

Sunday, October 15, 2017

சாபம்


வணக்கம்!
          சாபம் வாங்கிய ஜாதகத்தை படித்துவிட்டு பல நண்பர்கள் தொடர்புக்கொண்டு கேட்டறிந்தனர். இவ்வளவு பேர்கள் இதில் இருக்கின்றனர் என்பது வியப்பாகவே இருக்கின்றது. அவர்களின் ஜாதகத்தை பார்த்தாலும் அது தான் தெரிய வருகின்றது.

முதலில் ஒன்றைச்சொல்லவேண்டும். முதலில் இந்த தோஷத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டதே பெரிய தெய்வீக செயல் தான் என்று சொல்லவேண்டும். குருவும் சுக்கிரனும் கெட்டால் ஒருவர் சொல்லக்கூடிய கருத்தை ஏற்றுக்கொள்ளவே உங்களால் முடியாது.

முக்கியமாக உங்களை விட வயது முதியவர்கள் சொல்லும் ஒரு வார்த்தையும் உங்களின் மூளை ஏற்றுக்கொள்ளாது. குருவும் சுக்கிரனும் கெட்டால் முதல் அடிப்படை அவர்கள் யார் பேச்சையும் கேட்கமாட்டார்கள்.

கடந்த ஒரு மாதத்திற்க்கு முன்பு ஒரு பெண்ணின் தகப்பனார் என்னை சந்திக்க தஞ்சாவூர் வந்திருந்தார். அவர் பெண்ணை திருமணம் செய்துக்கொடுத்து இருக்கிறார். அந்த பெண் அவரின் கணவரோடு வாழமுடியாது எனக்கு விவாகாரத்து வாங்கிக்கொடுங்கள் என்று கேட்கிறது என்றார். நீங்கள் வந்து எனது பெண்ணிடம் கொஞ்சம் அறிவுரை கூறுங்கள் என்றார்.

நான் அறிவுரை சொல்லுவது எல்லாம் ஜாதககதம்பத்தில் மட்டும் தான் சொல்லுவேன். நேரில் வந்து எல்லாம் சொல்லமாட்டேன். அந்த பெண்ணின் ஜாதகத்தை கொடுங்கள் என்று வாங்கி பார்த்தேன். அந்த பெண்ணின் ஜாதகத்தில் குருவும் சுக்கிரனும் நன்றாக பாதிக்கப்பட்டது தெரிந்தது.

முதலில் உங்களின் பெண் அவரின் கணவரின் பேச்சை கேட்காது. அது தான் பிரச்சினையாக இருக்கும். அவரின் பேச்சை கேட்க சொல்லுங்கள் இருவருக்கும் கருத்து வேற்றுமை வராது. நன்றாக இருப்பார்கள் என்று சொன்னேன். சரி என்று சென்றார்.

அடுத்தவர்கள் ஒரு நல்ல அறிவுரையை சொன்னால் அதனை கேட்கும் பக்குவத்தில் நமது மனநிலை இருக்கவேண்டும். அதற்கு குருவும் சுக்கிரனும் நன்றாக வேலை செய்யவேண்டும் அப்பொழுது தான் கேட்கமுடியும்.

சாபம் வாங்கியவர்களின் ஒரு பகுதியினர் பிடிவாதத்தால் தன் வாழ்க்கையை தொலைத்தவர்களாக இருப்பார்கள். ஒரு சிலருக்கு ஒன்றும் நடக்காது. ஒரு சிலருக்கு இப்படிப்பட்ட பிடிவாதம் இருக்கும். மேலும் பல கருத்துக்கள் இதனைப்பற்றி பார்க்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: