Followers

Thursday, October 5, 2017

சுக்கிரனுக்கு எளிய பரிகாரம்


வணக்கம்!
          சுக்கிரனின் அருளை பெறுவதற்க்கு எளிமையான வழியை சொல்லுங்கள் என்று நண்பர் ஒருவர் கேள்வி அனுப்பியிருநதார். 

சுக்கிரனின் அருளை பெறுவதற்க்கு அம்மன் வழிபாட்டை அதிகமாக அனைவரும் சொல்லுவார்கள். அது ஒரு பக்கம் இருந்தாலும் எங்கு அதிக சொகுசு இருக்கின்றது அங்கு சென்று வருவதும் ஒரு நல்ல பலனை கொடுக்ககூடியது தான்.

சுக்கிரனின் காரத்துவம் உடையவர்களிடம் தொடர்பை வைத்திருக்கும்பொழுது கூட சுக்கிரனின் அருளை பெறமுடியும். பெரும்பாலும் பெண்கள் சுக்கிரனின் காரத்துவத்தில் முதலில் வருவார். பெண்களின் அன்பை பெறுவதில் சுக்கிரனின் அருளை பெறலாம்.

தற்பொழுது தீபாவளி பண்டிகை வருகின்றது. அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு ஆடை வாங்கிக்கொடுக்கலாம். அவர்களை நீங்கள் தவறாக பார்த்துவிடகூடாது. ஆடை வாங்கிக்கொடுத்து விட்டால் அவர்களின் பாசம் உங்களுக்கு கிடைக்கும்பொழுது சுக்கிரனின் அருளை பெறலாம்.

ஏழை பெண்களாக இருந்தால் இன்னமும் சிறப்பு. இல்லாதவர்களுக்கு நாம் இதனை செய்யும்பொழுது இன்னமும் சிறப்பாக இருக்கும். சுக்கிரனின் முழுமையான அருளை பெற்றுவிடலாம்.

இன்று ஆறாவது வீட்டிற்க்கு பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்ப கடைசிநாள். ஆறாவது வீட்டிற்க்கு பரிகாரத்திற்க்கு ஜாதகத்தை அனுப்பியவர்களை தொடர்புக்கொண்டு வருகிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: