Followers

Wednesday, October 11, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          களத்திரகாரகன் என்று வர்ணிக்கப்படுகின்ற சுக்கிரன் ஏழில் நின்றால் அது பெரிய தோஷம். சுக்கிரனோடு ஒரு கிரகம் சேர்ந்து நின்றால் அது தோஷமாக இருக்காது. தனித்து சுக்கிரன் ஏழில் நின்றுவிடகூடாது.

சுக்கிரன் ஏழில் நின்றால் திருமணம் நடைபெறாது. திருமணம் நடைபெற்றாலும் அது பிரச்சினையை கொடுக்ககூடிய ஒரு விதமாகவே அமையும். அவர்களுக்கு திருமண வாழ்க்கை அந்தளவுக்கு சந்தோஷமாக அமையாது.

சுக்கிரன் ஏழில் நிற்க்கும்பொழுது அவர்கள் திருமணம் செய்பவர்கள் நன்றாக உயர்ந்துவிடுவார்கள் ஆனால் இருவருக்கும் பிரச்சினை மட்டும் தான் வரும். ஒவ்வொருவருக்கும் திருமணம் முடிந்த பிறகு ஒரு வாழ்க்கை இருக்கின்றது. அது நல்லதாக அமையுமா அல்லது தீமையாக அமையுமா என்பது சுக்கிரனை பொறுத்து அமையும்.

ஒரு சிலருக்கு திருமணம் நடைபெற்றவுடன் அவர்களின் வாழ்க்கை பெரியளவில் முன்னேற்றம் இருக்கும். ஒரு சிலருக்கு திருமணம் நடைபெற்றவுடன் பெரிய அடி விழுந்து வீணாக போய்விடுவார்கள். இது அவர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் அமைந்த நிலையை பொறுத்து அமையும்.

இருவரின் ஜாதகத்தில் ஒருவருக்கு சுக்கிரன் நன்றாக இருந்தால் போதும் ஒரளவு நல்ல வாழ்க்கை அமையும். உங்களின் திருமணத்திற்க்கு பிறகு நல்ல வாழ்க்கை இருக்கின்றதா அல்லது வீணாக போய்விட்டதாக நினைத்தால் இருவரின் ஜாதகத்தையும் எடுத்து ஆராய்ந்து பார்த்தால் கண்டிப்பாக அதில் சுக்கிரனை பார்த்து தெரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: