Followers

Friday, October 13, 2017

பரிகாரம்


ணக்கம்!
          பரிகாரத்திற்க்கு அனுப்பிய ஒவ்வொருவரையும் தொடர்புக்கொண்டு பேசி வருகிறேன். பரிகாரம் என்றாலே ஏதோ அனைவருக்கும் ஒரே நாளில் செய்து முடித்துவிட்டு அதோடு முடிவடைந்துவிட்டது என்று செல்லாமல் தனித்தனியாக செய்ய முடிவெடுத்திருக்கிறேன்.

அன்றைய நாளில் அவர்களை தொடர்புக்கொண்டு அவர்களுக்கு தெரிவித்துவிட்டு தான் செய்யவிருக்கிறேன். நீங்களும் பரிகாரம் ஏதோ செய்தோம் என்று இருந்துவிடாமல் உங்களுக்கு உள்ள வழிகளை எல்லாம் பரிகாரம் முடிவடைந்துவுடன் துரிதப்படுத்த வேண்டும்.

பரிகாரம் செய்வதில் இரண்டு வகையில் இருப்பார்கள். ஒன்றுமே தெளிவில்லாமல் இருக்கின்றது எதுவும் நடக்கவில்லை என்று ஒரு வகையினர் இருப்பார்கள். மற்றவர் அனைத்தையும் தயார் செய்து வைத்துவிட்டு அது நடக்கவேண்டும் என்று இருப்பார்கள்.

நீங்கள் எந்த வகையில் இருந்தாலும் சரி உங்களின் செயலை பரிகாரத்திற்க்கு பிறகு துரிதப்படுத்தவேண்டும். அப்பொழுது உங்களின் செயல் வெற்றி நோக்கி செல்லும். 

ஒரு சிலர் இருக்கின்றனர். அதாவது தன்னுடைய அறிவு விருத்தியடைந்தால் போதும் அதனை வைத்து பல காரியங்கள் செய்யலாம் என்று இருப்பார்கள். எங்களை போல இருப்பர்கள் நினைப்பது தன்னுடைய அறிவை பெருக்க பரிகாரத்தை செய்வது உண்டு.

போதிய அறிவு இல்லை என்றாலும் சரி. இருக்கின்ற அறிவை மேம்படுத்திக்கொள்ள உள்ள வழியை எங்களை தூண்டிவிட பரிகாரம் செய்வது உண்டு. வெளியில் இருந்து வரும் விசயங்கள் அனைவருக்கும் குறைவு தான். அவர் அவர்களின் உடலில் மறைந்திருக்கும் யோகத்தை வெளிக்கொணர்வது இப்படிப்பட்ட வகை.

நீங்களும் இதனை நன்றாக தெரிந்துக்கொள்ளலாம். ஒவ்வொரு பரிகாரத்திற்க்கும் பிறகு உங்களின் உடல் யோகமாக மாறி உங்களை மாற்றும் வழியில் செயல்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: