Followers

Tuesday, October 10, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          சுக்கிரதசா நடைபெறுவர்களுக்கு பொருளாதாரத்தில் குறைவைத்தாலும் நோயில் குறை வைக்காது என்று ஏற்கனவே சொல்லிருக்கிறேன். சுக்கிரதசா நடப்பவர்கள் வருடத்திற்க்கு ஒரு முறை பரிகாரம் செய்யவேண்டும் என்று சொல்லுவது உண்டு. என்னுடைய வாடிக்கையாளர்களுக்கு சொல்லிவிடுவேன்.

அவர் அவர்களின் விருப்பம் என்பதையும் சொல்லிவிடுவது உண்டு. சுக்கிரதசா நடப்பவர்களுக்கு அப்படி என்ன நோய் வரும் என்று கேட்கலாம். முதலில் ஏதாவது ஒரு சிக்னல் காட்டி ஒரு நோயை காட்டும் அதன் பிறகு ஒவ்வாென்றாக ஆரம்பிக்கும்.

என்னுடைய அனுபவத்தில் நான் பார்த்ததில் அதிகம் அவர்களின் உடலில் உள்ள உறுப்புகள் வீணாகபோய்விடுகிறது. அதனை மாற்ற வேண்டிய சூழ்நிலை உருவாகின்றது. என்ன பயமுறுத்திகிறீர்கள் என்று நினைக்கவேண்டாம். இது எல்லாேருக்கும் நடைபெறுகிறது என்பதால் சொல்லுகிறேன்.

சுக்கிரதசா அல்லது சுக்கிரன் பலகீனமாக இருப்பவர்களுக்கு நோய் தன்மை இல்லாமல் இருக்கின்றது என்றால் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் தான். நீங்கள் கும்பிட்ட தெய்வம் உங்களை கைகொடுக்கிறது என்று அர்த்தம்.

சுக்கிரதசா நடைபெறும் நபர்கள் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருக்கவேண்டியது ஒரு விசயம் இருக்கின்றது. அது பெண்கள் தான். நீங்கள் சும்மா இருந்தாலும் உங்களை தேடி பெண்களை வருவார்கள். இதில் மட்டும் கொஞ்சம் எச்சரிக்கை இருந்தால் நல்லது. சும்மா பழகிறேன் என்று வந்து அதுவே வாழ்க்கைக்கு பிரச்சினையாக வரும்.

பெண்களாக இருந்தால் உங்களுக்கு இந்த பிரச்சினை இல்லை. உங்களை சுற்றி பெண்கள் வேலை செய்வது போல இருக்கும். இது பரவாயில்லை என்று சொல்லலாம். வீட்டில் பிறக்கும் குழந்தைகள் அதிகம் பெண்களாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷசுப்பு

No comments: