Followers

Friday, November 3, 2017

கேள்வி & பதில்

ணக்கம்!
          திரு கண்ணன் அவர்கள் ஒரு கேள்வி அனுப்பியிருந்தார். தினமும் சாம்பிராணி தீபம் போடுவோம். ஒரு சாதாரணமான நபர் ஹோமத்தில் கலந்துக்கொள்வது முடியாத ஒன்று சாம்பிராணி தீபம் மட்டும் போதுமா என்று கேள்வி அனுப்பியிருந்தார்.

சாம்பிராணி தீபம் சந்திரனுக்கு உரிய ஒன்று என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. நெய் என்பது சுக்கிரனுக்குரிய ஒன்று. முடிந்தவரை சாம்பிராணியை தினமும் போடுவதால் நல்லது நடக்கும். 

ஒரு நிலையில் இருந்து அடுத்த நிலைக்கு நாம் செல்லும்பொழுது ஒரு சக்தி தேவைப்படும் என்று நான் பழைய பதிவில் சொல்லிருக்கிறேன். பணத்தை மட்டும் வைத்து அடுத்த நிலைக்கு செல்லமுடியாத நிலை வரும்பொழுது நம்முடைய முயற்சியை வைத்து என்ன செய்யலாம் என்பதை யோசித்தால் அது வெற்றியை நோக்கி செல்லும்.

எங்கு ஹோமம் நடக்கிறது என்பதை அறிந்துக்கொண்டு அதில் சென்று மாதம் ஒரு முறையாவது கொஞ்ச நேரம் இருந்துவிட்டு வருவதற்க்கு திட்டம் தீட்டலாம். அது எந்த ஹோமம் நடந்தாலும் சரி அதில் கலந்துக்கொள்ளலாம். நமக்கு தேவை நெய் அக்னியில் இடுவது மட்டுமே.

சுக்கிரனோடு நம்மை இணைத்துக்கொள்ள பணம் தான் தடையாக இருக்கின்றது. சுக்கிரனின் நிலை விலையுர்ந்த ஒன்றாக இருக்கின்றது. நம்மிடம் அது இல்லை என்கிறபொழுது சுக்கிரன் நம்மோடு இணையமாட்டான். 

பணம் இல்லாமல் நாம் செய்கின்ற வேலையை எல்லாம் செய்துவிட்டு பணம் வந்தபிறகு நாம் பணத்தால் செய்யமுடிகின்ற வேலையை எல்லாம் செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

1 comment:

Krish said...

Thank you sir for your time and effort to answer my question.

- A.Kannan