Followers

Wednesday, November 15, 2017

புண்ணியம்


வணக்கம்!
          இரண்டாவது நாளாக நவ அம்மன் ஹோமம் செய்யப்பட்டுவிட்டது. முடிந்தவரை என்னுடைய வாட்ஸ்அப்பில் தொடர்பில் இருப்பவர்களுக்கு படங்களை அனுப்பியிருக்கிறேன். தொடர்ந்து நாளையும் நடைபெறும். 

பல நண்பர்கள் எங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள் என்று கேட்கின்றனர். இதில் சேர்த்துக்கொண்டு செய்யவதற்க்கு வேலை இல்லை. இந்த யாகம் செய்வதற்க்கு தேவையான அனைத்து பொருட்களையும் நான் வாங்கிவிட்டேன். இனிமேல் வாங்குவதற்க்கு ஒன்றும் இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்துக்கொள்ளுங்கள்.

நவ அம்மன் யாகத்தை ஒவ்வொருவரும் வாழ்க்கையில் செய்துக்கொள்ளுங்கள். நாம் ஏதாவது ஒரு புண்ணியகாரியத்தை செய்து வைத்திருந்தால் அது நம்முடைய சந்ததினர்க்கு பெரிய புண்ணியமாக போய்விடும்.

இதனை நான் அனைவருக்கும் செய்வது கூட புண்ணியம் எனக்கும் கிடைக்கும். ஒன்பது நாட்கள் ஒரு குடும்பத்திற்க்கு செய்வது என்பது வெளியில் சென்று நீங்கள் செய்வது சாத்தியமில்லாத ஒன்று. நம்முடைய வாரிசுகளுக்கு இதனை செய்து நல்லதை தேடிவைத்துவிடுங்கள்.

பெரிய தொழில் செய்பவர்கள் எல்லாம் வருடம் ஒரு முறை இதனை பெரிய பொருட்செலவில் செய்கின்றனர். நாம் அவ்வாறு செய்யமுடியவில்லை என்றாலும் ஒரு முறையாவது செய்யவேண்டும் என்று நினையுங்கள். உங்களை தேடி இந்த வாய்ப்பு வந்துவிடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: