Followers

Thursday, November 16, 2017

சுக்கிரன்+குரு



வணக்கம்! 
          பொதுவாக சுக்கிரனுக்கு குருவுக்கும் அந்தளவுக்கு ஒற்றுமை இருக்காது. இரண்டும் இணைந்து இருந்தால் பலன் கொடுக்கும் என்ன ஒன்று என்றால் அது கொடுக்கும் பலன் நமக்கு அதிகளவு பயன்பெறாமல் செல்லும்.

சுக்கிரன் குரு இணைந்து சுக்கிர தசா நடைபெறுகிறது என்று வைத்துக்கொள்வோம். அந்த நேரத்தில் அவர் பணம் புலங்கும் தொழிலில் இருப்பார் ஆனால் அந்த பணம் அவர்க்கு சொந்தமாக இருக்காது. வேலை பார்ப்பது போல அமைந்து இருக்கும்.

ஒன்றை கொடுத்தால் ஒன்றைக்கொடுக்காது என்பது போல அமைந்து இருக்கும். ஒரு வழியில் பணத்தை கொடுத்தால் மறுவழியில் அதனை செலவு செய்ய வைக்கும். உரு சேராது என்று சொல்லுவார்கள் அல்லவா. அதுபோல வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கும்.

அனுபவத்தில் சுக்கிரன் குரு இணைந்தவர்களை பார்த்து இருக்கிறேன். இவர்கள் புண்ணியம் எல்லாம் செய்வார்கள் ஆனால் அதனால் ஒன்றும் பெரியதாக இவர்களுக்கு அமைந்துவிடாது. ஒரு சிலர் கல்விக்கு கூட தானம் எல்லாம் செய்வதை பார்த்து இருக்கிறேன்.

புண்ணியம் செய்வதிலும் கொஞ்சம் கணக்கு இருந்தால் தான் கலியுகத்தில் ஒருத்தர் வாழமுடியும் என்பதால் இதனை எல்லாம் இவர்கள் பார்த்து செய்யவேண்டும். சுக்கிரன் குரு இணைந்து ஜாதகத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக பரிகாரம் செய்யவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: