Followers

Saturday, November 18, 2017

நவ அம்மன் (சண்டி) யாகம்


வணக்கம்!
         நவ அம்மன் ஹோமம் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு இருக்கின்றது. ஒன்பது நாட்கள் செய்யப்படுகின்ற ஹோமம் என்பது அவ்வளவு எளிதான காரியம் கிடையாது. தொடர்ச்சியாக செய்கின்ற ஹோமம் என்பது அம்மனின் அருள் இருந்தால் மட்டுமே அது சாத்தியப்படகூடிய ஒன்று.

ஒன்பது நாட்கள் தொடர்ச்சியாக செய்யும்பொழுது பல தடைகளை தாண்டி செய்யவேண்டிய ஒன்று. ஒன்பது நாட்களும் ஒரே மாதிரியான ஒரு மனநிலை உருவாக்கி சம்பந்தப்பட்டவர்களுக்கு செய்யவேண்டும் என்கிற பொழுது அதற்க்காக என்னை தயார்ப்படுத்திக்கொண்டு தான் செய்யவேண்டியுள்ளது.

ஒவ்வொரு நாளும் செய்யும்பொழுது அதன் வீரியம் அதிகமாக வருகின்றது. ஒவ்வொரு நாளும் புகைப்படங்களை பார்த்தே அதனை அறிந்துக்கொள்ளமுடியும். என்னுடைய வாட்ஸ்அப்பில் உள்ளவர்களுக்கு அதனை அனுப்பி வைத்திருக்கிறேன். 

சக்திக்கு தகுந்தமாதிரி என்னை தயார்ப்படுத்தி அதனை செய்யவேண்டியுள்ளது. ஒரு சவாலான காரியத்தை செய்துக்கொண்டு இருக்கிறேன். ஏதோ பணம் கொடுக்கிறார் ஏதோ செய்தோம் என்று இல்லாமல் அவ்வளவு ஈடுபாட்டோடு அதனை செய்கிறேன்.

ஒரு ஆன்மீகவாதியாக இருந்தால் அதன் சக்தியை கண்டிப்பாக அவர்கள் உணர்வார்கள். ஒரு சாதாரணமான நபர்களுக்கு புகைப்படங்களை பார்த்தோ அதனை தெரிந்துக்கொள்ளலாம். அனைவரும் இதில் பங்குக்கொண்டு ஒரு நல்ல சக்தியின் அருளை பெறுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: