Followers

Wednesday, November 1, 2017

சுக்கிரனும் அன்னாபிஷேகமும்


வணக்கம்!
          நாம் ஒரு தலைப்பை எடுத்து பதிவு எழுதினால் அது உலகத்தில் அந்த சமயத்தில் நடக்ககூடிய ஒரு வகையில் அமையும். அம்மன் அது நமக்கு கொடுத்த அருள் மற்றும் குருவின் ஆசி என்று சொல்லலாம்.

சுக்கிரனைப்பற்றி நாம் எழுதிக்கொண்டிருக்கிறோம். தற்சமயம் அன்னாபிஷேகம் வருகின்றது. அன்னத்திற்க்கு காரத்துவம் வகிப்பவர் சுக்கிரன். அன்னாபிஷேகம் வருவதால் நீங்கள் இதனை செய்துவிடலாம்.

சுக்கிரன் மட்டும் அதிவேகமாக செல்லக்கூடிய ஒரு கிரகம் என்று இறைவன் வைத்திருக்கிறார். சுக்கிரன் அவர் போய் ஒரே வீட்டில் நீண்டநாள்கள் தங்கிவிட்டால் உலகத்தில் பசி பட்டினி அதிகமாக போய்விடும் என்று தான் இறைவன் அவரை வேகமாக சுற்ற வைத்திருக்கிறார் என்று நினைக்கிறேன். 

நீசமாக இருக்கின்ற சுக்கிரன் நாளை அடுத்த வீட்டிற்க்கு சென்றுவிடுவார். இனிமேல் பிரச்சினை இருக்காது. கணவன் மனைவிக்குள் சண்டை இருந்தால் அது எல்லாம் இனிமேல் இருக்காது.

தீபாவளி முடிந்து ஒருத்தரிடமும் பணம் இருந்திருக்காது. கையில் பணம் இல்லாமல் எந்த வேலையும் அடிப்படை செலவு செய்யகூட பணம் இருந்திருக்காது. இனி பணம் வரும். நிலுவையில் உள்ள பணம் எல்லாம் வந்து சேரும்.

சுக்கிரனுக்கு உகந்த அன்னாபிஷேகத்தை செய்வதற்க்கும் வாய்ப்பு வருகின்றது அதனை செய்துவிடுங்கள். சிவனுக்கு நீங்கள் செய்யும் இந்த அன்னாபிஷேகம் சுக்கிரனுக்கும் உகந்த ஒன்றாக இருக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: