Followers

Monday, November 13, 2017

நவ அம்மன் யாகம்


வணக்கம்!
          நவ அம்மன்(சண்டி) யாகம் நாளை ஆரம்பம் ஆகின்றது. நவஅம்மன் யாகத்தை எதிர்பார்த்து காத்திருந்தேன். அம்மனிடம் அதற்கு அனுமதி வேண்டி இத்தனை நாட்கள் இருந்தேன். இதனை செய்வதற்க்கு அனுமதி வந்த காரணத்தால் உடனே ஆரம்பம் ஆகின்றது.

வழக்கமாக நான்கு செங்கற்கல்லை மட்டும் யாகம் நடக்கும். தற்பொழுது கொஞ்சம் பெரியதாக செய்கிறேன். யாகத்தை உயர்த்தி செய்யவேண்டும் என்பதற்க்காக சிறிய மேடை அதன் மேல் யாக குண்டம் அமைத்து செய்யப்படுகிறது.

நவ அம்மன் யாகம் அனைவரும் செய்யுங்கள் என்று அழைப்பு விடுத்தேன். பல நண்பர்கள் அதற்க்காக தொடர்புக்கொண்டு கேட்டு வருகின்றனர். அனைவரும் செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன். உடனே தொடர்புக்கொண்டு உங்களின் சந்தேகங்களை கேட்டுக்கொள்ளுங்கள்.

நவஅம்மன் நாளை காலை செய்யபோகிறேன். குறைந்தது இரண்டரை மணி நேரம் அதற்கு மேலும் ஆகும். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவிதமான பொருட்களை வைத்து யாகம் செய்யப்படுகின்றது. ஒரு அற்புதமான யாகத்தை செய்யவிருக்கிறோம்.

ஒரு நல்ல விசயத்தை நாம் செய்வதற்க்கு தயக்கம் காட்டாமல் அனைவரும் நாமும் ஒரு முறை இப்படிப்பட்ட யாகத்தை செய்யவேண்டும் என்று முனையுங்கள். கடவுள் அருளால் இந்த வாய்ப்பு உங்களுக்கு அமையும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: