Followers

Sunday, December 10, 2017

ஏழாவது வீட்டில் சுக்கிரன்


ணக்கம்!
          சுக்கிரன் ஏழில் நின்றால் அது களத்திரதோஷம் என்று சோதிடம் சொல்லுகிறது. சுக்கிரன் ஏழில் நிற்பவர்கள் நிறைய பேர்கள் நல்ல வாழ்க்கையும் வாழ்கின்றனர். ஏழில் சுக்கிரன் நிற்க்கும்பொழுது அவர்களுக்கு திருமணம் செய்யும்பாெழுது மட்டும் காலதாமதம் ஆகும் என்பதை தவிர மற்றபடி நல்ல வாழ்க்கை கிடைக்கிறது.

ஏழில் தனித்து நிற்க்கும் சுக்கிரன் களத்திரம் தோஷம் தருகின்றது என்று நீங்கள் நினைத்தால் சுக்கிரனுக்குரிய பரிகாரத்தை செய்துக்கொள்ளலாம். ஒரு சில இடத்தில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை சச்சரவு ஏற்படும் அவர்கள் சுக்கிரன் வழிபாட்டை செய்துக்கொள்ளலாம்.

சுக்கிரன் ஏழில் நின்று உங்களுக்கு பொருத்தம் பார்க்கும்பொழுது ரஜ்ஜி பொருத்தம் இல்லாமல் திருமணம் செய்யவேண்டாம். ரஜ்ஜி பொருத்தம் இருந்தால் மட்டும் திருமணம் செய்துக்கொள்ளுங்கள். 

ஏழில் நிற்க்கும் சுக்கிரன் அதிக பெண் தொடர்பை கொடுப்பார். உங்களின் திருமண வாழ்வில் பிரச்சினை வருகின்றது என்றால் சந்தேகபார்வை பார்ப்பதால் தான் வரும். பெண்களின் தொடர்பில் மிகவும் ஜாக்கிரதையாக இருந்தால் இந்த பிரச்சினை வராது.

களத்திர தோஷம் கடுமையாக இருக்கின்றது என்றால் அருகில் இருக்கும் அம்மன் கோவிலுக்கு தாலி வாங்கிக்கொடுத்தால் இந்த தோஷம் நிவர்த்தியாகும். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

3 comments:

Krish said...

Sir

I have a question. In this article, you said about 7th place of sukran. Is this mean the sukran is in 7th place in a jadhagam(i.e during birthtime of a person) or current sukran's position.

Thanks & regards
A.Kannan.

rajeshsubbu said...

பிறந்த ஜாதகத்தில் சுக்கிரன் அமைந்த இடத்தை வைத்து பலனை சொல்லுகிறேன்.

Krish said...

Thank you sir for your time and effort.

Thanks & regards
A.Kannan.