Followers

Wednesday, December 20, 2017

காதலில் சொதப்பல்


வணக்கம்!
          ஒருவருக்கு சுக்கிரன் தசா நடக்கிறது என்றால் அந்த நேரத்தில் குருவின் புத்தி வந்தால் அவருக்கு காதல் முறிவு ஏற்படும். திருமணம் செய்த தம்பதினர்களிடம் சண்டை சச்சரவு ஏற்படும். பெரும்பாலும் சுக்கிரனுக்கு மறைவு ஸ்தான அதிபதி புத்தி வந்தாலும் பிரச்சினை வந்துவிடும்.

ஒருவருக்கு குரு தசா நடக்கும்பொழுது சுக்கிரனின் புத்தி வரும்பொழுது காதல் முறிவு ஏற்பட்டுவிடும். அதோடு இருவரும் சேரமுடியாத நிலையை உருவாக்கிவிடும். திருமணம் தம்பதினர்களாக இருந்தால் சண்டை சச்சரவோடு முடிவடையும்.

சுக்கிரன் தசா நடக்கும்பொழுது பெண்களிடம் காதல் சொன்னால் அந்த காதல் கைகூடும். அதே நேரத்தில் உடனே நீங்கள் திருமணம் செய்துவிட்டால் நல்லது. காலதாமதம் ஏற்பட்டால் அடுத்த பெண்ணால் உங்களுக்குள் காதல் முறிவு ஏற்பட்டுவிடும்.

குரு தசா நடக்கும்பொழுது உங்களுக்கு காதல் வந்தால் உடனே திருமணம் நடைபெற்றுவிட்டால் நல்லது. திருமணம் நடைபெறவில்லை என்றால் அந்த காதல் எதற்க்காக பிரிந்தது என்று தெரியாமல் பிரிந்து செல்வதற்க்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும்.

சுக்கிரனால் ஏற்படும் காதலைப்பற்றி சொல்லுவதற்க்கு தான் இப்படிப்பட்ட தலைப்பில் பதிவை எழுதுகிறேன். சோதிடத்தில் அனைத்தும் சொல்லவேண்டும் அல்லவா. 

இன்று திருச்சி வரை செல்கிறேன். 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: