Followers

Tuesday, December 26, 2017

கர்மா


வணக்கம்!
          நாம் ஆன்மீகத்தில் இருந்தாலும் இதனை தக்கவைத்துக்கொள்ளவேண்டும் அதோடு நமது வாழ்நாளையும் நீட்டிக்க வழி செய்துக்கொண்டு இருக்கவேண்டும். ஜாதககதம்பத்தை படிப்பவர்கள் பெரும்பாலும் ஆன்மீகவாதிகள் தான் அதிகம் படிக்கின்றனர்.

இந்த உலகத்தில் கெட்டவர்களை விட நல்லவர்கள் தான் உடனே இறந்துவிடுகின்றனர். இது ஆன்மீகவாதிக்கும் பொருந்தக்கூடிய ஒன்று தான். பல ஆன்மீகவாதிகள் திடீர் மரணத்தை எய்துவிடுகின்றனர். என்ன காரணம் என்று பல விதத்திலும் நான் ஆராய்ச்சி செய்து பார்த்து இருக்கிறேன்.

ஆன்மீகவாதிகளாக மாறியவுடன் அப்படியே சுத்தமானவர்களாகவே மாறிவிடுகின்றனர். சுத்தமாக கர்மாவே இல்லாத நிலையில் திடீர் மரணத்தை தந்துவிடும். ஆன்மீகவாதிகளாக இருந்தாலும் அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக கர்மாவை வைத்துக்கொண்டு தான் இருக்கவேண்டும்.

ஒரு கர்மாவையும் எடுக்காமல் அப்படியே சுத்தமாக மாறிவிட்டால் மரணம் வந்துவிடும். ஆன்மீகத்தில் இருந்தாலும் அவ்வப்பொழுது கர்மாவை சேர்ப்பது போலவே இருந்தால் வாழ்நாளை நீட்டிப்பது செய்து விடலாம்.

எப்படி எல்லாம் இரண்டையும் சமன் செய்துக்கொண்டு செல்வது என்பதை நீங்கள் தேர்ந்தெடுத்துக்கொண்டு செல்லுங்கள். என்னை சந்திக்கும்பொழுது இதனைப்பற்றி கேட்டுக்கொள்ளுங்கள். என்னுடைய அனுபவத்தையும் உங்களோடு பகிர்ந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: