Followers

Thursday, December 7, 2017

நவ அம்மன்(சண்டி) பொது யாகம்


ணக்கம்!
          கடந்த முறை நவஅம்மன்(சண்டி) யாகம் நடந்தபொழுது இரண்டு நபர்க்கு செய்யப்பட்டது. இதனை ஒவ்வொருவரும் தனித்தனியாக செய்யவேண்டும் என்று சொல்லிருந்தேன். பலர் இதனைப்பற்றி கேட்டுள்ளனர். 

பலர் செய்வதற்க்கு ஆசைப்படுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அந்தளவுக்கு அதற்கு பணம் கொடுக்க முடியவில்லை. பணம் இல்லாமல் இருக்கின்றனர் என்பது தெரியவருகிறது. ஒரு சில நண்பர்கள் என்னிடம் போனில் தெரிவிப்பதற்க்கு தயக்கப்பட்டு மெயிலில் எழுதியுள்ளனர்.

ஒரு சிலர் மெயிலில் நிறைய கருத்துக்களை கூறியுள்ளனர். அதில் பொதுவாக ஒன்றை செய்யுங்கள். அடிக்கடி அதனை நடத்தப்படவில்லை என்றாலும் மூன்று மாதத்திற்க்கு ஒரு முறையாவது பொதுவாக ஒரு நவஅம்மன் யாகத்தை செய்துக்கொடுங்கள் என்று கேட்டுள்ளனர்.

என்னால் முடியாது என்று அவர்களிடம் சொல்லமுடியவில்லை. அதே நேரத்தில் போதிய பணம் இல்லை என்றால் என்ன செய்வது என்று அவ்வப்பொழுது நமக்கு நிதி அளிக்கும் நண்பர்களை தொடர்புக்கொண்டேன். அவர்களும் இதனை செய்யலாம் என்று சொல்லிருந்தனர். 

ஒரு சில தினங்களில் அம்மன் பூஜை முடிந்த பிறகு நவ அம்மன் யாகத்திற்க்கு ஆயத்தம் செய்யப்படும். நவ அம்மன் யாகத்திற்க்கு விருப்படுபவர்கள் தங்களின் ஜாதகம் மற்றும் தங்களைப்பற்றிய விபரத்தோடு தங்களால் முடிந்த பணத்தை செலுத்தி வைக்கலாம். தங்களின் வாட்ஸ்அப் எண்ணையும் இணைக்கவேண்டும்.

சனிப்பெயர்ச்சி பரிகாரம் செய்கிறேன் என்று சொல்லிருந்தேன் அதனை செய்யவில்லை. சனிப்பெயர்ச்சி பரிகாரத்தை விட சக்தி வாய்ந்த நவ அம்மன் யாகம் செய்யப்படுகிறது. சனிப்பெயர்ச்சிக்கும் இந்த நவ அம்மன் யாகம் செய்வது நல்லது தான் செய்யும். உடனே காலம் தாழ்த்தாமல் அனுப்பி வைக்க வேண்டுகிறேன். அனைவரும் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து இருக்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: