Followers

Friday, December 29, 2017

சுக்கிரன்


வணக்கம்!
          ஒருவர் செல்வசெழிப்பில் வாழவேண்டும் என்றால் அவர் பிற வழிபாட்டை விட அம்மன் வழிபாடு மிக எளிய வழியில் முன்னேற்றம் அடைய செய்து செல்வசெழிப்பில் உங்களை வளர செய்துவிடும்.

வெள்ளிக்கிழமை செய்யும் வழிபாடு மிக சிறந்த வழிபாடாக பொதுவாக எல்லா மதங்களிலும் இருக்கும். வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்யும் நபர்களை நன்றாக உற்று கவனித்தால் அவர்கள் மிக சிறந்த பணக்காரர்களாக இருப்பார்கள் அல்லது செல்வந்தர்களாக விரைவில் மாறிவிடுவார்கள்.

பிற மதத்தில் உள்ளவர்களை நன்றாக கவனித்தால் அவர்கள் நன்றாக சாப்பிடுபவர்களாகவும் இருப்பார்கள். நான் சொல்லும் நன்றாக சாப்பிடுபவர்கள் என்பது ஊட்டசத்து நிறைந்த உணவை சாப்பிடும் நபர்களாகவும் இருப்பார்கள். இந்த ஊட்டசத்து அவர்களுக்கு நிறைய செல்வவளங்களை ஈர்த்து தரும் விதத்தில் இருக்கின்றது.

நம்ம ஆளுங்க வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்வார்கள் ஆனால் தொடர்ந்து செய்ய மாட்டார்கள். தொடர்ந்து வெள்ளிக்கிழமை வழிபாட்டை செய்தால் தான் பலன் உங்களுக்கு கிடைக்கும்.

நவ அம்மன் பொது யாகத்திற்க்கு ஜாதகம் அனுப்பியவர்கள் தங்களுக்கு நவ அம்மன் யாக புகைப்படங்கள் வரவில்லை என்றால் எனது வாட்ஸ்அப் எண்ணை தொடர்புக்கொள்ளவும். தங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்.

வாட்ஸ் அப் எண் 9551155800.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: