Followers

Monday, December 4, 2017

சனிப்பெயர்ச்சி


வணக்கம்!
         சனிப்பெயர்ச்சியைப்பற்றி நிறைய நண்பர்கள் கேட்டுள்ளனர். சனிப்பெயர்ச்சியைப்பற்றி பயம்கொள்ள தேவையில்லை. ஒரு சில காலக்கட்டத்தில் சோதிடர்கள் மக்களை பயமுறுத்திக்கொண்டு இருப்பார்கள். தற்பொழுது மக்களே மக்களே பயமுறுத்திக்கொண்டு இருக்கின்றனர். அனைவரும் குட்டிசோதிடர்களாக இருக்கின்றனர் அல்லவா.

சனிப்பெயர்ச்சியைப்பற்றி அதிக பயம்கொள்ள தேவையில்லை அதே நேரத்தில் ஒரு சில விசயத்தில் மட்டும் கவனத்தோடு செயல்படவேண்டும். சனி உங்களுக்கு பாதகமாக இருக்கின்றது என்றால் உங்களின் வீட்டில் உள்ள அனைவருக்கும் உடல்நிலையில் கவனம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

உடல்நிலை மோசமாக போவதற்க்கு காரணம் அவர்களிடம் எதிர்ப்பு சக்தி என்பது குறைவாக இருக்கும். நல்ல உணவுகளை எடுத்துக்கொள்ள சொல்லவேண்டும். உடல் நன்றாக இருந்தால் மனம் தடுமாற்றம் ஏற்படாது. 

பொறுமையை அதிகமாக கையாண்டால் எந்த ஒரு பிரச்சினையும் அவ்வளவு எளிதில் வந்துவிடாது. பொறுமையை இழக்கும்பொழுது தான் பிரச்சினை உங்களின் முன் வந்துவிடுகிறது. சனி உங்களை விடாது.

சனி உங்களுக்கு பாதகமாக இருந்தால் உங்களுக்கு கோவிலுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகாது. உங்களின் வீட்டில் பூஜையறையில் பூஜை செய்வதற்க்கு கூட உங்களால் முடியாத ஒரு நிலையை உருவாக்குவதில் சனி வல்லவர். நீங்கள் காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக பூஜை செய்யவேண்டும் என்று முடிவு செய்து செய்துக்கொள்ளுங்கள்.

உங்களின் வீட்டிற்க்கு அழைத்து அடிக்கடி அன்னதானம் செய்வது போல பல நிகழ்வுகளை உருவாக்குங்கள். உங்களின் வீட்டில் கூட்டம் கூடுவதுபோல சனி ஏற்பாடு செய்வார். அது நல்லதற்க்காகவே நடப்பது போல செய்துக்கொள்ளுங்கள்.

திருநள்ளாறு சென்று அங்கு தீர்த்தத்தில் குளித்துவிட்டு சாமியை ஒரு முறை தரிசனம் செய்துவிட்டு வாருங்கள். அங்கு சென்று வருவது நன்மை பயக்கும். அங்கு சென்று நீராடாமல் வரக்கூடாது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: