Followers

Saturday, December 9, 2017

ஆஞ்சநேயர் வழிபாடு


ணக்கம்!
         சனிப்பெயர்ச்சி நெருங்கி வரும் நேரத்தில் அனைவரும் ஒன்றை செய்யலாம். சனி நல்லது கொடுத்தாலும் சரி தீமைக்கொடுத்தாலும் சரி அதற்கு நல்லதை தரும் விதமாக ஆஞ்சநேயர் வழிபாட்டை செய்யலாம்.

இன்று சனிக்கிழமை அனைவரும் உங்களுக்கு அருகில் இருக்கும் ஆஞ்சநேயர் கோவில் சென்று அங்கு ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். ஆஞ்சநேயர் கோவில் சென்று வெண்ணைகாப்பு சாத்தி வழிபட்டு வாருங்கள். வெண்ணைகாப்பு செய்யமுடியவில்லை என்றால் சும்மா வழிபாடு செய்துவிட்டு வாருங்கள்.

ஆஞ்சநேயர் சனியால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்து நல்ல பலனை தருவார். இதனை பல வருடங்கள் சொல்லிவருகிறேன். பலர் நன்மை அடைந்து இருக்கின்றனர். நாம் ஏன் செல்லவேண்டும் என்று இருக்காமல் ஒரு முறை சென்று வருவது நல்லது.

ஆஞ்சநேயர் வழிபாடு என்பது சனியின் பாதிப்புகள் இருக்கும்பொழுது மட்டும் செய்யாமல் எப்பொழுதும் செய்யலாம். பல நன்மைகள் இருக்கின்றன. ஆஞ்சநேயர் கோவில் மிக பழைமையான கோவில் எல்லாம் இருக்கின்றது அதனை தேடிப்பிடித்து வழிபாட்டை செய்யலாம்.

ஆயிரம் வருடத்திற்க்கு முற்பட்ட ஆஞ்சநேயர் கோவில்கள் கூட இருக்கின்றது. நாம் கொஞ்சம் முயற்சி எடுத்து இப்படிப்பட்ட கோவிலை கண்டு தரிசனம் செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: