Followers

Saturday, December 9, 2017

நவ அம்மன்(சண்டி) யாகம்


வணக்கம்!
          பொதுவாக ஒரு நவஅம்மன் யாகம் நடத்தலாம் என்று பதிவில் எழுதியிருந்தேன். பதிவை எழுதி அடுத்த பத்து நிமிடத்திற்க்குள் தனி நபர் ஒருவர் தன்னுடைய குடும்பத்திற்க்கு மட்டும் ஒன்றை செய்துக்கொடுங்கள் என்று கேட்டார். 

அவரின் வேண்டுகோளை ஏற்று அவருக்கு என்று உடனே நடத்தலாம் என்று திட்டமிட்டேன். பொது நவ அம்மன் யாகம் அவருக்கு நடத்திய பிறகு நடத்தப்படும். பொது நவ அம்மன் யாகத்திற்க்கு நிறைய நண்பர்கள் கேட்டுள்ளனர்.  அனைவரும் ஜாதகம் அனுப்பிய பிறகு ஆரம்பிக்கப்படும்.

தனி நபர்கள் இதற்கு அதிகம் விருப்பம் தெரிவித்து இருக்கின்றனர் என்பது எனக்கு இந்த யாகம் ஆரம்பித்தவுடனே எனக்கு தெரிந்தது. நிறைய நண்பர்கள் விரும்பம் தெரிவித்தனர். இது ஒரு சேவைபோல நடத்தப்படுவதால் இதற்கு விரும்பம் அதிகம் அதோடு பலனும் அதிகமாக கிடைக்கும்.

நவ அம்மன் யாகம் வருகின்ற திங்கள் கிழமை(11-12-2017) முதல் ஆரம்பிக்கப்படுகிறது. இந்த நவஅம்மன் யாகம் ஒருவரின் குடும்பத்திற்க்காக நடத்தப்படுகிறது. அவரின் பெயர்.

அணைக்கரையை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள்.

இவர் இந்த முறை நவ அம்மன் யாகம் நடத்துகிறார். தொடர்ந்து ஒன்பது நாட்கள் இந்த யாகம் நடைபெறும். சிறந்த முறையில் நடைபெறவிருக்கிறது.

நவஅம்மன் பொதுயாகத்திற்க்கும் தங்களின் ஜாதகத்தை அனுப்பி வையுங்கள். இந்த யாகம் முடிந்த பிறகு அடுத்த பொது நவ அம்மன் யாகம் கண்டிப்பாக நடத்தப்படும்.

அம்மன் பூஜையும் ஒரு சில தினங்களில் நடத்தப்பட இருக்கின்றது.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: