Followers

Friday, December 1, 2017

சுக்கிரன்


ணக்கம்!
          முக்கால்வாசி பேருக்கு திருமணத்திற்க்கு பிறகு நல்ல நிலைக்கு வந்துவிடுவார்கள். ஒரு சிலருக்கு திருமணத்திற்க்கு பிறகு வீணாக போய்விடுவார்கள். இது எதனை காட்டுகிறது என்றால் அவர்களுக்கு துணையாக வரும் ஐாதகர்களின் ஜாதகத்தில் சுக்கிரன் கிரகத்தின் நிலையை கொண்டு செயல்படும்.

முக்கால்வாசி பேர் என்று சொல்லும் நபர்களுக்கு சொந்த ஜாதகத்தில் சுக்கிரன் அடி வாங்கியிருக்கும் என்று தான் சொல்லவேண்டும். ஏன் என்றால் அவர்களின் துணை வந்தபிறகு தான் அவர்கள் வெற்றி நடைபோட துவங்கியிருக்கிறார்கள்.

சுக்கிரனின் ஆற்றல் கிடைத்தவுடன் அவர்கள் தன்னுடைய வேலையை சரியாக செய்ய துவங்கின்றார்கள் என்றே சொல்லலாம். எதுவும் இல்லாமல் இருந்தவர்கள் நன்றாக ஒடதுவங்கிவிடுவார்கள். சுக்கிரன் பலன் ஏதோ ஒரு வழியாக தனக்கு கிடைத்தவுடன் அவர்கள் செட்டில் ஆகிவிடுகின்றனர்.

ஒரு சிலர் திருமணம் செய்தவுடன் வீணாக போகின்றவர்களாகவும் இருப்பார்கள். இவர்களுக்கு வரும் துணையின் ஜாதகத்தில் சுக்கிரன் கிரகம் பலன் குறைந்து காணப்படும். இவர்க்கும் பலன் இல்லாமல் இவர்களின் துணையின் ஜாதகத்திலும் பலன் இல்லாமல் இருக்கும்பொழுது வாழ்க்கை தோல்வியை நோக்கி செல்லுகின்றது.

உங்களின் வாழ்க்கையில் திருமணத்திற்க்கு முன்பு நன்றாக இருந்ததா அல்லது திருமணத்திற்க்கு பிறகு நன்றாக இருந்ததா என்று கவனித்து பாருங்கள். உங்கள் இருவரின் ஜாதகத்தை எடுத்து பார்த்தால் என்ன என்பது புரியும். சுக்கிரன் ஜாதகத்தில் எப்படி இருக்கின்றது என்பதை தெரிந்துக்கொள்ள உங்களின் ஜாதகத்தை அனுப்பி ஆலோசனை கேட்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: