Followers

Monday, December 31, 2018

நன்றி


வணக்கம்!
          ஒவ்வொரு வருடமும் ஆண்டின் இறுதியில் இப்படி முடித்தால் தான் நமக்கும் ஒரு உத்வேகத்தோடு வருகின்ற ஆண்டில் எழுதமுடிகின்றது. இந்த வருடத்தில் நிறைய சம்பவங்களை நான் பார்த்து இருந்தாலும் பல நல்ல விசயங்களும் நடந்தன. நிறைய புதிய நட்புகள் எனக்கு கிடைத்தன. தொடர்ந்து பல நட்புகளை நாம் பெற்றுக்கொண்டே இருக்கிறோம். வரும் ஆண்டும் நிறைய பேர் என்னை சந்திக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்.

எங்களின் பகுதியில் அடித்த புயல் புரட்டிபோட்டது. இது ஒன்று தான் கொஞ்சம் துயரமான சம்பவம் என்றாலும் அதில் இருந்து மீண்டு வந்துக்கொண்டு இருக்கிறோம் மற்றபடி அனைத்தும் நல்லவையாகவே சென்றுக்கொண்டு இருக்கின்றன.

இந்த வருடத்தில் ஒரு புதிய முயற்சியை கடந்த ஒரு மாத காலமாக எடுத்துக்கொண்டு இருக்கிறேன். இதனை இந்த ஆண்டு கொடுத்தற்க்காக இறைவனிடம் நன்றியை தெரிவித்துக்கொண்டு செயல்பட்டுக்கொண்டு இருக்கிறோம். என்ன புதிய முயற்சி என்பதை வரும் ஆண்டில் அது முழுவடிவம் பெறும்பொழுது சொல்லுகிறேன் அது வரை அது இரகசியமாகவே இருக்கட்டும். 

ஜாதக கதம்பத்தைப்பற்றி அடுத்தவர்களிடம் சொல்லும் நட்புகளுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். வரும் ஆண்டில் நிறைய பதிவுகளை கண்டிப்பாக கொடுக்கவேண்டும் என்ற உத்வேகத்தோடு இருக்கிறேன். தொடர்ந்து நல்ஆதரவை கொடுக்கும் அனைத்து நட்புகளுக்கும் நன்றி நன்றி நன்றி. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 30, 2018

ஜாதக பலனை கட்டுபாட்டில் வைப்பது எப்படி?


வணக்கம்!
          ஜாதக கட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு வேலை செய்துக்கொண்டே இருக்கும் இதில் நம்முடைய இஷ்டத்திற்க்கு ஒரு சில வீடுகளின் உள்ள தன்மையை குறைத்துக்கொள்ளலாம். நாம் விருப்படும் அளவுக்கு அதனை குறைக்கமுடியும்.

செலவை எடுத்துக்கொண்டு சொல்லுவோம். செலவு என்பதை ஒரு மனிதனால் கண்டிப்பாக அவன் நினைத்தால் குறைக்கலாம். செலவு என்பது ஒரு விதத்தில் விரையவீடாக வருகின்றது. விரைய வீட்டின் செலவை மனிதனால் குறைத்தால் அவனின் ஜாதக கட்டத்தில் உள்ள ஒவ்வொரு வீட்டின் குணத்தையும் பெரியளவில் குறைக்கமுடியவில்லை என்றாலும் ஒரளவு அவனின் பிடியில் வைக்கமுடியும்.

இதனை எல்லாம் புரிந்துக்கொண்டு நடப்பதற்க்கு அவனிடம் திறமையான ஆன்மீகபலம் மற்றும் கொஞ்சம் புத்தியும் வேலை செய்தால் கண்டிப்பாக அனைத்து வீட்டையும் அவனின் கட்டுபாட்டில் கொண்டு வரலாம்.

திடீர் செலவு மற்றும் திடீர் விபத்துக்கள் வருகின்றனவே இதனை எப்படி கட்டுபடுத்தலாம் என்றும் மனது கேட்க நினைக்கும் இதனை ஆன்மீக வழியில் கண்டிப்பாக குறைக்கமுடியும் என்தபற்க்காக தான் ஆன்மீக பலம் தேவை என்று மேலே சொல்லிருக்கிறேன்.

பிறவியிலேயே இருக்கும் ஒரு சில விசயங்களை நிறைய போராடி நாம் கட்டுப்படுத்தவேண்டும். அனைத்தையும் ஒரு சில காலக்கட்டங்கில் நீங்களே மாற்றிக்கொள்ளமுடியும் என்பதற்க்காக இதனை எழுதுகிறேன். சராசரியாக ஐம்பது சதவீத பலனை நீங்களே கட்டுபாட்டில் கொண்டுவந்துவிட்டால் உங்களின் ஜாதகபலனை நீங்களே கட்டுபாட்டில் கொண்டுவருகின்றீர்கள் என்று அர்த்தம் கொள்ளலாம்.

ஒவ்வொரு வீட்டில் உள்ள காரத்துவத்தையும் உங்களின் தினசரி வாழ்க்கையில் என்ன நடக்கின்றது என்பதை உற்று நோக்கி அதற்கு தகுந்தார்போல் மாற்றவேண்டும் என்பதையும் ஞாகபத்தில் வைத்துக்கொண்டு செயல்படவேண்டும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 29, 2018

கேள்வி & பதில்


வணக்கம்!
          தற்பொழுது உள்ள காலக்கட்டத்தில் பதிவுகளை தருவதற்க்கும் நிறைய இடைஞ்சல்கள் வந்துக்கொண்டே இருக்கின்றன. அதனை மீறியும் பதிவுகளை எப்படியும் கொடுத்துக்கொண்டே இருக்கிறேன். புயல் அடித்த காரணத்தால் பகல் நேரத்தில் மின்சாரப்பணி நடைபெறுவதால் மின்சாரம் வருவதில்லை. மின்சாரம் வந்தபிறகு ஒரு வாரம் பகலில் மின்சாரம் கொடுத்தார்கள் தற்பொழுது எல்லாம் பகலில் மின்சாரம் வருவதில்லை.

தோஷங்களை போக்கும் வழி என்ற பதிவை படித்துவிட்டு நாம் செய்யும் பரிகாரம் மற்றும் பூஜைகளால் நமது தோஷங்கள் எல்லாம் நம்மைவிட்டு போகுமா என்று நண்பர் ஒருவர் கேட்டார். மனிதனை பிடித்து இருக்கும் கர்மாவை போக்கவில்லை என்றால் நாட்டில் கோவில் என்பதே இருக்காது நண்பரே.

கோவில் கட்டி இருப்பதே நம்முடைய கர்மாவை போக்கி இந்த வாழ்விலும் பிற ஜென்மத்திலும் ஒரு நல்ல கதியை கொடு என்பதற்க்காக தான் கோவிலை கட்டி வழிபட்டுக்கொண்டு மக்கள் இருக்கின்றார்கள். 

நாம் சொல்லும் விசயங்கள் நடக்கவில்லை என்றாலும் நாம் செய்யும் பரிகாரங்கள் எடுபடவில்லை என்றாலும் இத்தனை காலங்கள் நாம் எழுதவே முடியாது. பல வருடங்கள் எழுதிய பதிவுகளை எல்லாம் படித்து பயன்பெறுவதால் மட்டுமே எழுத முடிகின்றது.

நாம் சொல்லும் பரிகாரம் மற்றும் பூஜைகள் நல்ல பலனை கொடுக்கும். நீங்கள் செய்யும் வழிபாடுகளும் உங்களுக்கு நல்ல பலனை கொடுக்கும். முதலில் நம்பிக்கை வைத்து அனைத்தையும் ஒவ்வொன்றாக செய்து வாருங்கள் நல்ல வாழ்க்கை அமைவது உறுதியாக சொல்லலாம்.

புத்தாண்டுக்கு விஷேசமாக வழிபாட்டை செய்யவேண்டுமா என்று நண்பர் ஒருவர் போனில் தொடர்புக்கொண்டு கேட்டார். புத்தாண்டுக்கு என்று நாம் விஷேசமாக வழிபாட்டை செய்யவேண்டியதில்லை வழக்கம் போல் வீட்டிலேயே வழிபாட்டை செய்யலாம். 

புத்தாண்டு என்பது வலுக்கட்டயமாக நம்மீது திணித்த ஒன்று தான். இதனை வைத்தே நமது சம்பளமும் இருக்கின்றது என்பதால் அன்றைய நாளை நாம் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கின்றது. அனைத்து அலுவலகமும் ஆங்கில வருடத்தை கணக்கில் வைத்து தான் சம்பளம் வந்துக்கொண்டு இருப்பதால் இதனை சொல்லுகிறேன். இரவில் வழிபாட்டை எல்லாம் செய்யவேண்டாம். பகலில் வழிபாடு செய்தால் போதுமானது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 28, 2018

தோஷங்களை போக்கும் வழி


வணக்கம்!
          ஒருவர் கஷ்டப்படுவதற்க்கும் நன்றாக வாழ்வதற்க்கும் அவர்களின் ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் தீர்மானிக்கின்றது. ஜாதகத்தில் உள்ள கிரகம் நல்ல நிலையில் அமர்ந்தால் அவர்களுக்கு அனைத்தும் நன்றாகவே நடக்கும்.

ஜாதகத்தில் உள்ள கிரக நிலைகள் சரியில்லை என்றால் அவர்களுக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வந்துக்கொண்டே இருக்கும். இதனை தவிர்ப்பதற்க்கு அவர்கள் ஆன்மீக வழியில் நிறைய முயற்சிகளை மேற்க்கொள்ளவேண்டும்.

ஜாதகத்தில் நிறைய தோஷங்களை கொண்ட ஜாதகமாக அமைந்துவிடகூடாது. நிறைய தோஷங்களை தாங்கிக்கொண்டு இருந்தால் அவர்களின் வாழ்க்கை வீணாக தான் சென்றுக்கொண்டு இருக்கும். தோஷம் அனைவருக்கும் இருக்கும் அதிகமாக தோஷங்களை கொண்டதாக இருக்ககூடாது.

எதுவுமே நடக்கமாட்டேன்கிறது என்று அலைந்துக்கொண்டு இருக்கும் நபர்களுக்கு எல்லாம் ஜாதகத்தில் நிறைய தோஷங்கள் இருக்கின்றன என்று அர்த்தம் கொள்ளவேண்டும். ஒரு சிலருக்கு பைத்தியம் போல்  அலைந்து திரிந்துக்கொண்டு இருப்பார்கள் இவர்களுக்கும் தோஷங்கள் இருக்கின்றன என்று அர்த்தம்.

தோஷங்களில் இருந்து விடுதலை அடையவேண்டும் என்றால் நிறைய புண்ணிய நதிகளில் நீராடுவது நிறைய கோவிலுக்களுக்கு சென்று வழிபடுவது எல்லாம் செய்தால் இதில் இருந்துவிடுபடலாம். ஒரு ஆன்மீக குருவை நாடி அவர்களின் வழியில் சென்றால் கண்டிப்பாக இதில் இருந்து மீண்டுவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 27, 2018

நவ அம்மன் (சண்டி) யாகம்



வணக்கம்!
          ஒருவருக்கு பாதிப்பு வருகின்றது என்றால் அது கர்மா என்று தான் சொல்லுவோம். கர்மாவை நீக்க அவர் அவர்களுக்கு தெரிந்த விசயங்களை செய்துக்கொண்டு இருக்கின்றனர். நம்முடைய ஜாதககதம்பம் படிக்கும் அனைவரும் ஏதோ வகையில் ஆன்மீகவாதிகளாகவே இருக்கின்றனர்.

குடும்பத்தில் உள்ள அனைவரும் ஆன்மீகவாதியாக இருக்கமுடியாது. ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டும் ஆன்மீகவாதியாக இருக்கமுடியும் அவர் தான் அந்த குடும்பத்திற்க்கு தேவையான ஆன்மீக வழியில் உள்ள விசயங்களை செய்து அந்த குடும்பத்திற்க்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும்.

நமஅம்மன் யாகமும் ஒவ்வொரு குடும்பத்திற்க்கும் தேவையான ஒன்று தான். இதனை தனிநபர் ஆண்டுக்கு ஒருமுறையாவது தனியாக செய்யுங்கள் என்று சொல்லுவது உண்டு. தனிநபர் செய்யமுடியாதவர்களுக்கு பொதுவான நவஅம்மன் யாகத்தை செய்துக்கொண்டு வருகிறோம்.

நவஅம்மன் யாகம் செய்யும்பொழுது ஒவ்வொருவரும் தங்களுடைய இணைப்பை இணைத்துவிடுகின்றனர் அது நல்லது தான் அதனை தொடர்ந்து செய்துக்கொண்டே இருங்கள் என்று சொல்லுகிறேன். நவஅம்மன் யாகம் செய்யும் அனைவரும் பங்களிப்பை அளிக்கும்பொழுது கண்டிப்பாக உங்களின் வாழ்வில் முன்னேற்றம் என்பது நடந்தே தீரும்.

நவஅம்மன் யாகத்திற்க்கு அனைவரும் தங்களுடைய பெயர் மற்றும் நட்சத்திரம் அதோடு உங்களுடைய வாட்ஸ்அப் எண்ணை அனுப்பி வையுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 26, 2018

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
          ஒருவரின் வீட்டிற்க்கும் அவர்களுக்கு வரும் நோய்களுக்கும் நிறைய சம்பந்தம் வரும். வீட்டின் அமைப்பு என்ற ரீதியில் நான் சொல்லவில்லை. ஒரு வீட்டிற்க்குள் நுழையும் தீயசக்திகளின் வழியில் இது வருகின்றது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும்.

பழைய காலத்தில் நோய்க்கும் பேய்க்கும் மருத்துவம் பார்க்கவேண்டும் என்று சொல்லிருக்கிறார்கள். தற்காலத்தில் நோய்க்கு மட்டும் வைத்தியம் பார்க்கிறார்கள் பேய்க்கு பார்ப்பதில்லை என்பதை சொல்லி தான் ஆகவேண்டும். 

தீயசக்திகள் அல்லது எதிர்மறையான ஒரு விசயம் உள்ளே நுழைகின்றது என்று வைத்துக்கொள்வோம். அந்த விசயம் தான் ஒருவரை திடீர் நோய் தாக்குதலுக்கு உள்ளாகின்றது. இதனை உங்களிடம் சொல்லும்பொழுது இதனை ஏற்றுக்கொள்ளமுடியாது ஆனால் ஆன்மீகத்தில் இது உண்மை என்று சொல்லலாம்.

பெரும்பாலான இடத்தில் இந்த வீட்டில் உள்ளவர்க்க்கு நோய் தாக்குதல் வரப்போகின்றது என்பதை எனக்கு பெரும்பாலும் ஒரு மாதத்திற்க்கு முன்பே தெரிய வருகின்றது. ஒரு மாதத்திற்க்கு பிறகு அந்த வீட்டில் உள்ளவர் ஒருவர் நோய்வாய்ப்படுகின்றார்.

நோய்க்கு ஆன்மீகத்தில் செய்வது என்பது கொஞ்சம் கடினமாகவே இருக்கும். நிறைய போராட்டம் செய்து இதனை நாம் செய்யவேண்டியிருக்கும். தாக்கும் சக்திக்கும் நமக்கும் நிறைய போராட்டம் இருக்கின்றது அதனை எல்லாம் சமாளித்து வரும்பொழுது தான் நோயாளிக்கு சரியான தீர்வு கிடைக்கும்.

இதனை தடுப்பது என்பது உங்களின் தொடர்ச்சியான வழிபாடு தான் இதனை தடுக்கும். பெரும்பாலும் அம்மன் வழிபாடு இதனை நன்றாகவே தடுகின்றது இதனை அனைவரும் செய்து நல்ல வழியை தேடிக்கொள்ளலாம். வாஸ்துபடி இதனை சொல்லவில்லை என்பதையும் அறியவேண்டும். வாஸ்துக்கும் இதற்க்கும் சம்பந்தம் இல்லை.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 25, 2018

நல்வாழ்த்துக்கள்

வணக்கம்!
          இனிய கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்.


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 24, 2018

நவ அம்மன்(சண்டி) பொது யாகம்


வணக்கம்!
         ஒரு சில காலங்களாக பொதுவாக எதுவும் செய்யாமல் இருந்தது. புயலில் இருந்து ஆயத்தம் ஆவதற்க்கு இவ்வளவு நாள்கள் தேவைப்பட்டது. தற்பொழுது மின்சாரம் எல்லா நேரத்திலும் வருகின்றது. தொடர்ச்சியாக அதிகமான பதிவுகளை தருகிறேன்.

ஜாதக பலன் கேட்பவர்கள் இனிமேல் தொடர்ந்து உங்களின் ஜாதகத்தை அனுப்பலாம். ஜாதகபலனை நீங்கள் கேட்டு தெரிந்துக்கொள்ளலாம். ஜாதக பலன் சேவை தொடர்கின்றது. 

கடந்த ஆண்டில் இதே நேரத்தில் நவ அம்மன் (சண்டி) யாகம் செய்யப்பட்டது. ஆண்டின் தொடக்கத்தில் இதனை பொதுவாக செய்யப்பட்டது. இந்த நேரத்திலும் இதனை செய்வதற்க்கு ஆயத்தம் செய்துக்கொண்டு இருக்கிறேன்.

நவ அம்மன் (சண்டி) யாகத்திற்க்கு தங்களால் முடிந்த காணிக்கையை செலுத்தி வைக்கலாம். பொதுவாகவே இது நடைபெறுகின்றது காணிக்கை செலுத்த முடியவில்லை என்றாலும் பரவாயில்லை உங்களின் விபரங்களை எனக்கு தெரியப்படுத்துக்கள்.

உங்களின் வாட்ஸ்அப் எண்ணை எனக்கு தெரியப்படுத்த வேண்டும். நவ அம்மன் (சண்டி) யாகத்தின் புகைப்படங்களை அனுப்பவதற்க்கு வாட்ஸ் அப் எண் உபயோகமாக இருக்கும். விரைவில் நவ அம்மன் (சண்டி) யாகம் தொடங்கப்படுகின்றது. ஆண்டின் தொடக்கத்தை நல்ல விதமாகவே ஒரு யாகம் செய்து தொடங்கலாம். விரைவில் யாகம் நடைபெற இருக்கின்றது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, December 23, 2018

நான் அசைந்தால் அசையும் அகிலம் எல்லாமே!


வணக்கம்!
         ஆருத்ரா நாளில் நாளில் சிவனை வணங்கிக்கொண்டு எந்த நாளிலும் என்னுடைய வாழ்க்கையை கீழ் நோக்கி செல்லக்கூடாது மேல் நோக்கியே செல்லவேண்டும் என்று எண்ணி வணங்குங்கள் கண்டிப்பாக சிவன் உங்களுக்கு அதனை உங்களுக்கு வழங்குவார். 

பெரும்பாலும் அன்றைய விஷேச நாளில் மக்கள் கோவிலுக்கு வழிபட்டு வருவார்கள். நான் பெரும்பாலும் பூஜையறையிலேயே வணங்கிவிடுவது உண்டு. அனைத்து நாளிலும் நீங்கள் கோவிலுக்கு சென்று வழிபடுவது சிரமம். 

சிவராத்திரி அன்று சிவனை நினைத்தால் நல்லது என்பார்கள். ஆருத்ரா நாளில் சிவனை பார்த்தால் நல்லது என்பார்கள். பெரும்பாலும் சிவனை நினைப்பதே பெரிய விசயம் என்றே சொல்லலாம். 

சிவனை என்றும் நினைத்துக்கொண்டு இருப்பது பெரிய வரம் என்றே சொல்லலாம். அதுவே மிகப்பெரிய யாகத்தை நீங்கள் தினமும் செய்கின்றீர்கள் என்று அர்த்தம். சிவனை முடிந்தவரை நினைத்து நீங்கள் வாழ்ந்தால் வாழ்வில் ஞானத்தை உங்களின் குடும்பங்களும் உங்களை சார்ந்தவர்களுக்கும் கிடைக்கும்.

எந்த விஷேசமாக இருந்தாலும் அது நட்சத்திரத்தோடு தான் சம்பந்தப்பட்டு இருக்கும். சோதிடத்தில் உங்களின் நட்சத்திரத்திற்க்கு அதிக முக்கியத்துவம் உண்டு. விழாக்களும் நட்சத்திரப்படி தான் நடைபெறுகின்றது. 

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 22, 2018

தசாவால் பாதிப்பா?


வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் நாம் வழிபடும் தெய்வம் நம்மை பெரும் துன்பத்தில் இருந்து நம்மை காப்பாற்றும். ஏதோ ஒரு தெய்வத்தை தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் நம்முடைய பெரிய தோஷத்தை கூட போக்கி நல்ல வாழ்க்கையை தரும்.

ஒரு சிலர் தொடர்ச்சியாக ஒரு தெய்வத்தை வணங்கிக்கொண்டு வருவார்கள். ஒரு சில காலக்கட்டத்திற்க்கு பிறகு அவர்களுக்கு நடக்கும் தசா அவர்களை மாற்றும் ஒரு சிலருக்கு மட்டும் தொடர்ச்சியாக வணங்கி வருவது போல செய்யும். ஒரு சிலருக்கு தெய்வத்தின் அனுக்கிரகம் இருக்கும் ஆனால் தொடர்ச்சியாக வழிபாடு இருக்காது.

நாம் சம்பாதிக்கும் அனைத்தும் வருகின்ற தசா எடுக்கலாம் ஆனால் நம்முடைய ஆன்மீகத்தன்மையை மட்டும் எந்த தசாவும் எடுக்காது என்பதை என்னால் உறுதியாக கூறமுடியும். சொத்து பணம் எல்லாம் இடையில் வருவது ஆன்மீகம் என்பது பல ஜென்மங்களாக தொடரும் ஒரு பந்தம் என்று சொல்லலாம்.

பல நண்பர்கள் கூட என்னிடம் கேட்டு இருக்கின்றனர் குரு தசா போய்விட்டால் ஆன்மீகம் போய்விடுமா என்று கேட்பார்கள். எந்த தசா வந்தாலும் உங்களிடம் இருக்கும் ஆன்மீகம் மட்டும் உங்களை விட்டு செல்லாது.

ஒவ்வொரு தசாவிலும் நடந்த நல்ல விசயங்கள் உங்களை தொடர்ச்சியாக பின் தொடர்ந்து வரும் ஆனால் அதனை நாம் தான் கண்காணிப்பதில்லை. பல நல்லதும் கெட்டதும் தொடர்ச்சியாக வருகின்றது இதனை சற்று சிந்தித்து கண்காணித்து பார்த்தால் அட எதுவும் நம்மை விட்டு செல்லவில்லை என்பது உங்களுக்கு தெரியும்.

ஆன்மீகத்தின் தன்மை என்பதை ஆழ்ந்து நாம் பார்த்தால் அது நம்மை விட்டு செல்லாது என்பது உங்களுக்கு புரியும். ஆன்மீகத்தில் தொடர்ச்சியாக பயிற்சிகளை செய்து வாருங்கள்.

இன்று திண்டுக்கல் செல்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 20, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.







அன்புடன்
ராஜேஷ்சுப்பு




அம்மன் பூஜை படங்கள் பகுதி 2

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.





அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை படங்கள் பகுதி 1

வணக்கம்!
          இன்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.




அன்புடன்
ராஜேஷ்சுப்பு

அம்மன் பூஜை


வணக்கம்!
          இன்று அம்மன் பூஜை நடைபெறுகின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்தியவர்கள்.

சென்னையை சேர்ந்த திரு இராஜ்கண்ணன் அவர்கள்.   
நெதர்லாண்டை சேர்ந்த திரு முருகானந்தம் அவர்கள். 
சிங்கபூரை சேர்ந்த நண்பர் அவர்கள். 

காஞ்சிபுரத்தை சேர்ந்த திரு சிவன் அவர்கள். 
சென்னையை சேர்ந்த திரு ஹரிஹாரன் அவர்கள்.   
சென்னையை சேர்ந்த திரு சுகுமார் அவர்கள்.     

கோயம்புத்தூரை சேர்ந்த திரு வரதராஜன் அவர்கள். 
ஒடதுறையை சேர்ந்த மெய்யழகன் அவர்கள்.     
கரூரை சேர்ந்த திரு முத்துகுமார் அவர்கள்.       

பெரம்பலூரை சேர்ந்த திரு சத்தியசீத்தாராமன் அவர்கள்.   
பெங்களூரை சேர்ந்த திரு சுதன் அவர்கள்.   
மயிலாடுதுறையை சேர்ந்த யுவராஜ் அவர்கள். 
விழுப்புரத்தை சேர்ந்த திரு அசோக்குமார் அவர்கள். 

 வழக்கம்போல்             
                               திரு கிருஷ்ணப்பசரவணன் அவர்கள். 

மற்றும் பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை அளித்துள்ளனர்.

இன்று அம்மன் பூஜை நடைபெறுவதால் அனைத்து நண்பர்களும் அம்மனிடம் வேண்டுதலை வையுங்கள்.

அன்புடன்  
ராஜேஷ்சுப்பு 

Wednesday, December 19, 2018

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
         இது பெருமைக்காக எழுதப்பட்ட பதிவு என்பது போல இருக்கும் ஆனால் இது உண்மையாக நடந்த பதிவு என்பதை சொல்லுகிறேன். எப்பொழுதுமே ஆன்மீகவாதிகளுக்குள் பிரச்சினை என்பது இருந்துக்கொண்டே இருக்கும். ஒருத்தருக்குள் ஒருத்தர் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். நிறைய பொறாமை நிறைய கருத்து வேறுபாடு நிறைய மோதல்கள் எல்லாம் ஆன்மீகவாதிகளுக்குள் இருக்கும். 

பார்வையாளனகாக இருந்து இதனை பார்த்து உங்களுக்கு தருகிறேன். சென்னையில் இரண்டு ஆன்மீகவாதிகள் இருந்தனர். இந்த இரண்டு பேருக்கும் கடுமையான போட்டி. நான் பெரிய ஆளா அல்லது நீ பெரிய ஆளா என்று போட்டி இருந்தது.

ஒருவருக்கு வயது அதிகமாக இருந்தது ஒருவருக்கு என்னுடைய ஒத்த வயதை உடைய ஆன்மீகவாதியாக இருந்தார். அவர் இளமையில் அவர் வளர்ந்தது மூத்த வயதில் உள்ள ஆன்மீகவாதிக்கு பிடிக்கவில்லை. மூத்தவர்க்கு இளையவர் மீது பொறாமையாக இருந்தது.

மூத்தவர் நிறைய ஆன்மீகவழியில் அவரை தோற்கடிக்கும் விதத்தில் செயல்பட்டார். இளம்வயதில் இருந்த ஆன்மீகவாதி நிறைய தொல்லைகள் பட்டாலும் அதனை எல்லாம் பொறுத்துக்கொண்டே இருந்தார். அவர் வேலை உண்டு என்பது போலவே செயல்பட்டார்.

எதற்க்கும் ஒரு எல்லை உண்டு என்று தெரியும். இளம் வயதில் உள்ளவர் ஒரு காலக்கட்டத்திற்க்கு மேல் தாங்க முடியாமல் ஒரு வேலையை செய்தார். இனிமேல் சென்னையில் இவர் இருக்க முடியாதபடி ஆன்மீகவழியில் செய்தார். இவர் வேலை செய்த நேரம் மூத்த ஆன்மீகவாதிக்கு பிரச்சினை மேல் பிரச்சினை வந்து சென்னையை விட்டே செல்லும் நிலை ஏற்பட்டுவிட்டது.

இது நடந்து பத்து வருடங்களுக்கு மேல் சென்றுவிட்டது. இதுவரை அவரால் சென்னை பக்கம் வரவே முடியாத நிலையில் தான் இருக்கின்றது. இதில் என்ன இருக்கின்றது என்று நீங்கள் நினைக்கலாம். இது வெறும் பொறாமை சண்டை தானே என்று நினைக்கலாம். 

ஆன்மீகவழியில் ஒரு செயல் நடந்துவிட்டால் அந்த செயலை மறுபடியும் எடுப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் என்பது கிடையாது. அவர் இறந்தாலும் கூட அந்த காரியத்தை மீறி செயல்படமுடியாது எத்தனை ஆயிரம் வருடங்கள் சென்றாலும் அந்த நிகழ்வு என்பது அப்படியே இருக்கும் என்பதை சொல்லுவதற்க்கு இதனை சொன்னேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 18, 2018

பூர்வபுண்ணியம்


வணக்கம்!
          இது உண்மையில் நடந்த ஒன்று. பூர்வபுண்ணியம் எழுதிய பழைய காலத்தில் நடந்தது என்று சொல்லலாம். நம்ம ஆள் ஒருவர் நமது பதிவுகளை படித்துவிட்டு அவர் தன்னுடைய பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட நபரை தேடியிருக்கிறார். அவரின் பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட நபர் அடுத்தவரின் மனைவியாக இருந்திருக்கிறார். 

நம்ம ஆள் தேடிய நண்பரின் மனைவியாக இருந்திருக்கிறார். இவர் நேராக போய் நீங்கள் தான் என்னுடைய முன்ஜென்ம மனைவியாக இருந்திருக்கிறார் என்று சொல்லிருக்கிறார். இது முடிந்தபிறகு என்ன நடந்திருக்கும் என்று நீங்களே யோசித்து இருக்கமுடியும். சண்டை தான் வந்திருக்கின்றது. 

இந்த காலத்தில் போய் பூர்வஜென்மத்தோடு நீங்கள் சம்பந்தப்பட்டு இருக்கின்றீர்கள் என்று அடுத்தவர்களிடம் நீங்கள் சொன்னால் கண்டிப்பாக உங்களை பைத்தியக்காரன் என்று தான் சொல்லுவார்கள். ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு இதனை ஏற்றுக்கொள்ளுவார்கள். சாதாரணமாக இருக்கும் நபர்களுக்கு இது சாத்தியபடக்கூடிய ஒன்று கிடையாது.

பூர்வபுண்ணியத்தை நிறுத்திய காரணமும் இந்த காரணத்தால் தான்  நிறுத்தினேன். எதார்த்தமான வாழ்க்கை என்பது வேறு ஆன்மீக வாழ்க்கை என்பது வேறு. ஆன்மீகத்தை எதார்த்தமான வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்க்கமுடியாது. எதார்த்தமான வாழ்க்கையோடு ஒப்பிட்டு பார்த்தால் அனைவரும் ஆன்மீகவாதியாக இருந்தால் மட்டுமே சாத்தியப்படும்.

உங்களுக்கே பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்ட நபரை பார்க்கும் வாய்ப்பு அமைந்தால் அதனை நீங்கள் பெரியதாக எடுத்துக்கொள்ளவேண்டாம். பல தியான முகாம்களில் கூட முன்ஜென்மத்தை அறியும் வித்தையை கற்றுக்கொடுப்பதில்லை மேலே சொன்ன காரணத்தால் மட்டுமே இதனை அவர்கள் கொடுப்பதில்லை.

பூர்வபுண்ணியத்தை ஆராய்வது தவறு இல்லை ஆனால் இந்த காலம் என்பது வேறு. நடைமுறையில் நிறைய சிக்கல்கள் எல்லாம் வரும். சம்பந்தம் இல்லாமல் மாட்டிக்கொள்ளவேண்டாம். ஆன்மீகத்தில் ஒரு அங்கம் பூர்வபுண்ணியம் இருப்பதால் தான் இதனை எழுதுகிறேன்.

பூர்வபுண்ணியத்தை பற்றி நான் ஆராய்ந்த வரையிலும் மனநிலையில் அதிகமான பாதிப்பை கொடுத்துவிடக்கூடிய ஒன்று. இதனை அவ்வளவு எளிதில் நாம் எடுத்துக்கொள்ளமுடியாது. உங்களின் முன்ஜென்மத்தோடு சம்பந்தப்பட்ட நபரை நீங்கள் அடையாளம் காணும்பொழுது நீங்கள் வாழ்கின்ற தற்பொழுது வாழ்க்கை அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பதால் இதில் அதிகமாக இறங்கவேண்டாம். சும்மா படித்துவிட்டு செல்லுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 17, 2018

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
         ஒரு நண்பர் கேள்வி ஒன்றை அனுப்பியிருந்தார். நான் ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருக்கின்றேனா அல்லது நல்ல நிலையில் இல்லையா என்பதை எப்படி அறிவது என்று கேட்டு அனுப்பியிருந்தார்.

ஆன்மீகத்தில் இருப்பவர்கள் நல்ல நிலையில் இருக்கிறேன் அல்லது இல்லை என்பது எல்லாம் தாண்டி கலியுகத்தில் ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பதே பெரிய விசயமாகவே நான் கருதுகிறேன். இன்றைய காலத்தில் இருக்கும் பிற விசயங்களை எல்லாம் தாண்டி ஆன்மீக பக்கம் செல்வதே நீங்கள் நல்ல ஒன்றை தேர்ந்தெடுத்து இருக்கின்றீர்கள் என்ற அர்த்தம் கொள்ளவேண்டும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான உணர்வுகள் எல்லாம் தோன்றும். நான் ஆன்மீகத்தில் இருக்கிறேன் என்றால் எனக்கு ஒரு விதமான உணர்வுகளை கொடுத்து சக்தியை காட்டிக்கொடுக்கும். பிறர்க்கு வேறு ஒரு மாதிரியான உணர்வுகளை அல்லது ஏதோ ஒன்றை காட்டிக்கொடுக்கலாம். ஒவ்வொருவருக்கும் வித்தியாசம் இருக்கின்றது என்பது தெரிகிறது.

பொதுவாக ஒரு சில அறிகுறிகளை நாம் தெரிந்துக்கொள்ளலாம். முதலில் இரவு நேரத்தில் நீங்கள் காணும் கனவுகள் பெரும்பாலும் ஆன்மீகம் சம்பந்தபட்டவையாக வந்தால் ஒரளவு ஆன்மீகத்தில் ஈடுபாடு இருக்கின்றது என்று அர்த்தம். ஒரு சிலருக்கு பகலில் நம்முடைய எண்ணத்திற்க்கு தகுந்தமாதிரியான விசயங்களை தான் கனவாக வரும் என்று கேள்விபட்டு இருக்கலாம். அதனையும் தாண்டி எதனையும் சிந்திக்காத நாளில் ஆன்மீக கனவுகள் வரவேண்டும்.

முதலில் உங்களின் உணர்வுகளின் வழியாக காட்டிக்கொடுப்பது அடுத்தது கனவுகள் வழியாக காட்டிக்கொடுப்பது இருக்கவேண்டும். கனவுகளில் நீங்கள் பறப்பது போல இருந்தால் நல்ல நிலை என்று அர்த்தம் கொள்ளலாம். 

முக்கியமாக உங்களின் ஆத்மா நல்ல நிலையில் இந்த இருக்கின்றது என்பதை நீங்கள் காணும் கனவு கலர் நிறத்தில் வரவேண்டும். பிளாக் & அண்டு ஒயிட்டில் கனவு வந்தால் நீங்கள் சரியில்லாத நிலையில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

முதலில் உங்களுக்கு வரும் கனவு எப்படி வருகின்றது என்பதை அடையாளம் காண்பதற்க்கே உங்களுக்கு புரிந்து இருக்கவேண்டும். எல்லாேரும் நீங்கள் நினைத்துக்கொண்டு இருப்பீர்கள் நமக்கு கலராக தான் கனவு வருகின்றது என்று நினைப்பீர்கள். லட்சத்தில் ஒருவருக்கு கலராக கனவு வரும். கலர் கனவுகள் உங்களுக்கு வந்தால் நீங்கள் ஒரு சிறந்த ஆன்மீக நிலையில் இருக்கின்றீர்கள் என்று அர்த்தம்.

முதலில் உங்களுக்கு கலர் கனவாக வருகின்றதா அல்லது பிளாக்  & அண்டு ஒயிட்டில் வருகின்றதா என்பதை அறிய முயலுங்கள் அதன் பிறகு ஆன்மீகம் எப்படி இருக்கின்றதைப்பற்றி தெரிந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Saturday, December 15, 2018

சனி தசா


வணக்கம்!
          ஒருவருக்கு சனி தசா நடக்கும்பொழுது அவர்களின் செயல்பாடு எப்படி இருக்கும் என்று ஒரு நண்பர் கேள்வி அனுப்பியிருந்தார். சனிகிரகம் சுயஜாதகத்தில் எங்கு இருக்கின்றது என்பதை பொறுத்து சொன்னால் பலன் துல்லியமாக இருக்கும். பொது பலன்கள் என்பதால் ஒரளவு சரியாக இருக்கும்.

சனிக்கிரகம் எந்த இராசியில் இருக்கின்றது. சனிக்கிரகத்தின் பலன் எப்படி இருக்கின்றது. சனியை பார்க்கும் கிரகத்தின் தன்மையை ஆராய்ந்து பலனை பார்த்துக்கொண்டு பலனை சொன்னால் துல்லியமான பலன் கிடைக்கும்.

சனியின் காரத்துவம் மந்தநிலை. செயல்பாடுகளில் மந்தநிலையை காட்டக்கூடியதாக இருக்கும். பிறர் உங்களை தொந்தரவு கொடுத்துக்கொண்டே இருப்பார்கள். ஏதோ ஒன்று சம்பந்தம் இல்லாமல் உங்களை துரத்துவது போலவே பொதுவாக அனைவருக்கும் அமைந்துவிடுகின்றது.

சனியின் பலம் பெற்று தசா நடந்தால் அவர்களுக்கு நல்ல செல்வாக்கு கிடைக்கும். தொழில் ரீதியாக நல்ல வாய்ப்புகள் உங்களை தேடி வந்துக்கொண்டு இருக்கும். அரசியல் தொடர்பால் நல்ல நிலைக்கு வரலாம். 

சனி பலம் இல்லாமல் தசா நடந்தால் உங்களுக்கு உடல்ரீதியாக பிரச்சினை வரும். எதனால் உங்களின் உடல் இப்படி கெடுகிறது என்று கூட தெரியாது. மருத்துவரால் கண்டுபிடிக்க முடியாத ஒரு நோய் வரும்.

சனி தசா நடந்தாலும் அதில் நடக்கும் புத்திகளை பொறுத்தும் பலன் நடக்கும் ஒரு வேளை சனி நல்ல பலனோடு நடந்தால் அவர்களுக்கு  நடக்கின்ற புத்தி அனைத்திலும் நல்ல பலன் கிடைக்கின்றது. சனி தசா நடக்கும் காலங்கள் முழுவதும் கொஞ்சம் எச்சரிக்கையோடு இருப்பது நல்லது. இயற்கையிலேயே சனிக்கிரகம் பாவக்கிரகம் என்பதால் கெட்டது அதிகமாகவே கொடுக்கின்றது.

சனி தசாவிற்க்குரிய பரிகாரம் செய்யவும். சனிக்கிழமை தோறும் சனிபகவானை தரிசனம் செய்யலாம் அதோடு ஆஞ்சநேயரையும் வழிபடலாம். சனியின் இராசி உடைய மகரம் மற்றும் கும்ப இராசியினரோடு தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் சனி தசாயால் நல்லது நடக்கும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Friday, December 14, 2018

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
          ஒருவருக்கு ஏக்கம் அதிகமாக இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அனைவருக்கும் ஒன்று கிடைத்து அது எனக்கு மட்டும் கிடைக்காமல் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். அதனைப்பற்றிய எண்ணம் அதிகமாக அதிகமாக உருவாகி அது ஆத்மாவிற்க்குள் சென்றுவிடும். இது வாழ்நாளில் கடைசி வரை கிடைக்கவில்லை என்றால் ஆத்மா கடுமையான ஏக்கத்தோடு உயிர் விடும்பொழுது அது மறுபடி பிறந்து அதனை அடையும் வரை போராடும்.

உங்களுக்கே ஒரு ஏக்கம் இருக்கின்றது என்று வைத்துக்கொள்வோம். இந்த ஏக்கத்தை ஒரு நாள் கண்டிப்பாக நீங்கள் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். அது தவறு சரி என்பதை காட்டிலும் ஒரளவு நியாயமாக இருக்கும்பட்சத்தில் அதனை எப்படியாவது நிறைவேற்றிக்கொள்ளுங்கள்.

மனிதன் ஆசைப்படுவது இயல்பு ஆனால் ஏதோ ஒன்றின் மீது அதிகமான ஈடுபாடு இருக்கும் அல்லவா. இந்த ஈடுபாட்டை வாழ்நாளில் ஒரு நாள் நிறைவேற்றிக்கொள்ளவேண்டும். ஆசை அனைத்திலும் வைப்போம் ஆனால் ஏதாே ஒன்று அதிகமான ஆசை இருக்கும் அல்லவா அதனை நிறைவேற்றிவிட்டால் கண்டிப்பாக உங்களுக்கு பிறக்கவேண்டும் என்ற எண்ணம் இல்லாமல் போய்விடும். 

எனக்கும் நிறைய ஈடுபாடு இருந்தது அதனை எல்லாம் ஒவ்வொன்றாக நிறைவேற்றிக்கொண்டு இருக்கிறேன். உங்களின் ஈடுபாட்டையும் நீங்கள் நிறைவேற்றிக்கொண்டுவிட்டால் உங்களுக்கும் அது நல்லதாக இருக்கும்.

பலர் வெட்கப்பட்டு வயது ஆனவுடன் இதனை எங்கு செய்வது என்று விட்டுவிடுபவர்களும் இருக்க தான் செய்கின்றனர். வெட்கப்பட்டு இருக்க வேண்டியதில்லை உங்களின் ஆத்மாவிற்க்குள் உள்ள விசயத்திற்க்கு நீங்கள் செய்கின்றீர்கள் என்று நினைத்துக்கொண்டு செய்யலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 12, 2018

கர்மா


வணக்கம்!
          புயல் அடித்தபிறகு பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டு நீங்கள் எங்களின் ஊருக்கு வந்துவிடுங்கள் இங்கு தங்கிக்கொள்ளலாம் என்று கேட்டார்கள். நான் அதற்கு மறுத்துவிட்டேன்,

காரணம் என்ன என்றால் ஒரு பாதிப்பு என்பது ஏற்பட்டுவிட்டால் அது நமது கர்மாவால் வந்தது என்று அர்த்தம். தனிநபருக்கும் கர்மா இருக்கும் ஊருக்கும் கர்மா இருக்கும் நாட்டிற்க்கும் கர்மா இருக்கும். ஏன் இந்த உலகமே இயங்குவது கர்மா என்ற ஒன்றால் தான் இயங்குகின்றது.

என்னுடைய கர்மாவை அனுபவிக்க இந்த ஏற்பாடு என்று எடுத்துக்கொண்டு அதனை ஏற்றுக்கொண்டு இங்கேயே இருந்துவிட்டேன். பலர் கூப்பிட்டும் நான் வெளியில் செல்லவில்லை. கர்மாவையும் அனுபவித்துவிட்டேன்.

வாழவே முடியாத ஒரு சூழ்நிலை ஏற்பட்டு நமது உயிருக்கு பாதிப்பு வரும் நிலையில் இருக்கும்பொழுது வேண்டுமானால் அதனை விட்டு விலகலாம். அது கூட தவறு தான் ஆனாலும் எல்லா உயிர்களுக்கும் இருக்கும் உயிர் பயத்தால் வேண்டுமானால் விலகி ஓடலாம்.

ஊரில் இருந்து முடிந்தளவுக்கு கர்மாவை அனுபவித்துவிட்டேன். இந்த கர்மாவை அனுபவித்த காரணத்தால் நல்ல ஒரு தெளிவு எனக்குள் ஏற்பட்டது. இதனைவிட மிகப்பெரிய ஒரு வரம் என்று சொல்லும் அளவுக்கு வாய்ப்புகள் வருகின்றன.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 11, 2018

நன்றி


ணக்கம்!
          நேற்று இரவு முதல் மின்சாரம் வந்தது. இரவில் மட்டும் மின்சாரம் வருகின்றது. இது வந்ததே மிகப்பெரிய நல்லது. இனிமேல் தொடர்ச்சியாக  அதிகமான பதிவுகளை உங்களுக்கு தந்துவிடுகிறேன். புயலால் பல மாற்றங்கள் நடந்தது அதனைப்பற்றி எல்லாம் வரும் பதிவுகளில் எல்லாம் சொல்லுகிறேன்.

அம்மன்பூஜைக்காக நிறைய வேலைகளை செய்யவேண்டியிருக்கின்றது. அதற்கான வேலைகளை தொடர்ச்சியாக செய்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் அம்மன்பூஜை நடைபெறும். 

புயல் நிவாரணத்திற்க்கு என்று உதவிய அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்ளுகிறேன். வெளிமாவட்டங்களில் இருந்து புயல் பாதித்த பகுதிக்கு உதவியை செய்தார்கள் அல்லவா அவர்களால் தான் இந்த பகுதியில் இருக்கும் அனைத்து மக்களும் பயன்பட்டார்கள்.

அரசாங்கத்திடம் மட்டும் மின்சார உதவியை தான் மக்கள் எதிர்பார்த்தார்கள். முடிந்தளவுக்கு வெளிமாவட்டத்தில் உள்ள மக்கள் உதவி செய்ததை நமது பதிவில் வழியாக சொல்லவேண்டும் என்பதற்க்காக தான் இந்த பதிவை தருகிறேன்.

ஒவ்வொரு பகுதிக்கும் வெளிமாவட்டத்தில் இருந்து நிறைய நிவாரணங்களை அனுப்பி இங்குள்ள மக்களை காப்பாற்றினார்கள் அதற்கும் நன்றி. நீங்கள் அனுப்பிய பணத்தை வைத்து என்னாலும் உதவி செய்யமுடிந்தது. அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, December 6, 2018

இராகு & கேது


வணக்கம்!
        பொதுவாக நம்மை அதிகமாக ஏமாற்றுவது இராகு கிரகம் தான் நாம் இதனை எளிதாக எடுத்துக்கொண்டு பலனை சொன்னாலும் பல நேரத்தில் ஏமாற்றிவிட்டு ஜாதகரை பலி தீர்த்துவிடுவதும் உண்டு. ஜாதகர்களுக்கு மட்டும் இல்லை இந்த உலகத்தின் விதியை கூட ஏமாற்றி பலி வாங்கிவிடுவது உண்டு.

இராகு கிரகம் தானே மற்ற கிரகங்கள் போல இதனையும் கணக்கில் ஏதாே என்று எடுத்துக்கொண்டு பலனை சொல்லும்பொழுது பலன் கொஞ்சம் மாறிபோய்விடுவதும் உண்டு. உன்னிப்பாக பலனை காணும்பொழுது அது கொடுக்கும் பிரச்சினையை நாம் தெரிந்துக்கொள்ளலாம்.

இராகு கிரகம் நல்லது செய்யாமலும் இல்லை நல்லதும் ஜாதகருக்கு நிறைய செய்கின்றது. கெட்டது குறைவாக செய்தாலும் அது மிகச்சரியாக செய்யும் அதில் இருந்து தப்பிக்க முடியாத படி செய்துவிடுவதும் உண்டு.

இராகு கிரகம் ஒரு விதத்தில் இப்படி செய்தால் அதற்கு நேராக இருக்கும் கேது கிரகம் அதனைவிட மோசமாக செய்துவிடுவதும் உண்டு. இரண்டும் தசா காலத்தில் மட்டும் இல்லை கோச்சாரபலன் காலத்திலும் கூட அதிக பிரச்சினையை கொடுப்பதும் உண்டு.


புயல் நிவாரணத்திற்க்கு என்று பல நண்பர்கள் தங்களின் பங்களிப்பை அளித்து இருக்கின்றனர். தொடர்ச்சியாக பலரும் செய்துக்கொண்டு இருக்கின்றனர். அனைவருக்கும் நன்றியை இந்த நேரத்தில் சொல்லிவிடுகிறேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, December 5, 2018

பூர்வபுண்ணியம்


வணக்கம்!
          பூர்வபுண்ணியத்தைப்பற்றியும் நமது நண்பர்கள் எழுத சொல்லிருந்தனர் அல்லவா. பூர்வபுண்ணியம் சம்பந்தமாக நிறைய பதிவுகளை ஏற்கனவே கொடுத்து இருக்கிறேன். இதனை படித்துவிட்டு பல நண்பர்கள் தங்களின் பூர்வபுண்ணியத்தோடு தொடர்புடைய பலரை அடையாளம் கண்டுக்கொண்டனர். இதனை தொடர்ச்சியாக எழுதாமல் போனதற்க்கும் காரணம் இருக்கின்றன.

பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்டவரை பார்க்கும்பொழுது கண்டிப்பாக ஏதோ ஒரு விதத்தில் சண்டை சச்சரவு ஏற்பட்டுவிடும். சண்டை சச்சரவு ஏற்பட்ட காரணத்தால் பேசமால் கூட சென்றுவிடுவார்கள். பூர்வபுண்ணியத்தோடு சம்பந்தப்பட்டவரை சந்திக்க நேர்ந்தால் அவரோடு அன்பாக இருக்கவேண்டும் என்பதற்க்காக தான் இதனை எழுதியது உண்டு.

பெரும்பாலும் இது சாதாரணமானவர்களுக்கு பைத்தியம் போல நம்மை பார்க்க தோன்றும் அதே நேரத்தில் ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு இது அற்புதமாகவே தோன்றும். நீங்கள் ஆன்மீகத்தில் இருப்பதால் இதனை அனைத்தையும் ஒரு உணர்வு பூர்வமாகவே எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.

எந்த காரணத்திலும் வெறுப்பு மற்றும் சண்டை சச்சரவு ஏற்படுத்த கூடாது. ஏதோ ஒரு விதத்தில் அனைவரும் தொடர்போடு இருக்கின்றனர் என்பது மட்டும் ஒரு சில காலங்களுக்கு பிறகு உங்களுக்கு தோன்றும் நிலை ஏற்படும் அப்பொழுது நீங்கள் ஆன்மீகத்தில் சிறந்து நிலையை எட்டிக்கொண்டு இருக்கின்றனர் என்ற அர்த்தம் கொள்ளவேண்டும்.

பூர்வபுண்ணியத்தை சரி செய்து அதன் வழியாக நல்ல வாழ்க்கையை நீங்களும் மற்றும் உங்களை சார்ந்தவர்களும் வாழ்வதற்க்கு மட்டுமே இந்த தலைப்பை நாம் தேர்ந்தெடுத்து கொடுத்துக்கொண்டு இருக்கிறோம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, December 4, 2018

ஆன்மீக அனுபவங்கள்


வணக்கம்!
          பழைய பதிவுகளை படித்துவிட்டுக்கொண்டு நமது நண்பர்கள் இருக்கின்றனர். அதனை படித்துவிட்டு அதுபோல பதிவுகளை தாருங்கள் என்று நண்பர்கள் கேட்கின்றனர். உங்களுக்கு அதுபோல பதிவுகளை தருவதற்க்கு முயற்சிகளை மேற்க்கொள்கின்றேன். 

ஆன்மீக அனுபவங்கள் பதிவுகள் மற்றும் பூர்வபுண்ணியபதிவுகள் அதிகமாக தாருங்கள் என்று கேட்கின்றனர் நான் முடிந்தவரை முயற்சி செய்து உங்களுக்கு பதிவுகளை தருகிறேன். ஜாதக கதம்பம் பழைய பதிவுகள் போலவே மறுபடியும் உங்களுக்கு இருக்கும்.

புயல் அடித்தபொழுது நான் கண்டவரை ஒரளவு ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்புகள் குறைவாக இருக்கின்றன. மற்றவரை ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஆன்மீகத்தில் இருப்பவர்களுக்கு பாதிப்பு குறைவாக இருக்கின்றன.

புயல் அடித்தப்பொழுது பெரிய பாதிப்பு இருக்கும் என்று நினைத்து இருந்தேன். ஒரு அவசர நிலை ஏற்பட்ட உணர்வை தந்தோடு சரி பெரிய பாதிப்பை கொடுக்கவில்லை. புயல் மட்டும் இல்லை பல ஊர்களில் ஒவ்வொரு பிரச்சினைக்கும் இதனை பார்த்து எழுதுகிறேன்.

ஆன்மீகத்தில் இருந்தாலும் நாம் கொஞ்சம் நேர்மறையான கருத்துக்கள் உடையவராகவும் இருக்கும்பொழுது மட்டுமே நமக்கு நடக்கும் அனைத்திலும் நாம் தப்பிக்கலாம். இதனை அனைவரும் கடைபிடியுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Monday, December 3, 2018

இனிய தொடக்கம்


வணக்கம்!
          புயல் காரணமாக இதுவரை மின்சாரம் வரவில்லை. தொடர்ந்து பதிவை தந்துவிடுகிறேன். நகர்புறங்களில் ஒரு சில இடத்தில் மின்சாரம் வந்திருக்கின்றது. பிரவுசிங் சென்டரில் இருந்து பதிவை தந்துவிடுகிறேன். 

புயல் நிவாரணத்திற்க்கு பலர் தங்களின் பங்களிப்பை அளித்து இருந்தனர் அனைவருக்கும் நன்றி. பல நல்ல உதவிகளை நான் மக்களுக்கு செய்து இருக்கிறேன். பல ஊர்களுக்கு என்னால் நிவாரணப்பொருட்களை அனுப்பமுடிந்தது. 

வெளியூர் நண்பர்களின் உதவியோடு பல இடங்களுக்கு தன்னுடைய வழிகாட்டி வழியாக உதவி சென்றடைந்தது. அனைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். பல நண்பர்கள் புயல் அடிக்கும்பொழுது அதன் அனுபவங்களை எழுத சொல்லிருந்தனர் அவ்வப்பொழுது அதனையும் சொல்லுகிறேன்.

தொடர்ச்சியாக பூஜைகள் நடந்துக்காெண்டு இருக்கின்றன. ஜாதக பலன் மட்டும் பார்க்க ஆரம்பிக்கவில்லை. மின்சாரபிரச்சினை காரணமாக தான் அதனை தள்ளிவைத்து இருக்கிறேன். விரைவில் அனைத்தும் சரியாகும்.

அம்மன் கோவிலும் புயலால் மரக்கிளைகள் பாதிப்படைந்து இருக்கின்றன. ஓட்டு கொட்டகைகளில் ஒரு சில ஓடுகள் பாதிப்படைந்து இருக்கின்றன. அதனை எல்லாம் சரி செய்துவிடுவோம். 

விரைவில் அம்மன் பூஜை நடைபெற இருக்கின்றது. அம்மன் பூஜைக்கு காணிக்கை செலுத்துபவர்கள் செலுத்தி வையுங்கள். கட்டண பதிவிலும் தொடர்ச்சியாக பதிவுகள் வரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 27, 2018

புயல் நிவாரணம்


வணக்கம்!
          நீண்டநாட்களுக்கு பிறகு உங்களை சந்திக்கிறேன். புயல் பாதிப்பால் மின்சாரம் இதுவரை வரவில்லை. மின்சாரம் வருவதற்க்கு இன்னமும் நாட்கள் பிடிக்கும் என்று தோன்றுகின்றது. கார் சார்ஜர் வழியாக போன் சார்ஜ் செய்துக்கொள்கிறேன்.

புயல் நிவாரணம் வழங்கி இருக்கிறோம். பல நண்பர்கள் புயல் நிவாரணத்தில் பங்குக்கொள்ளவேண்டும் என்று கேட்டனர். பூஜைகளுக்கு மட்டுமே உங்களிடம் கேட்பது உண்டு.ஒரு மாவட்டமே புயலால் பாதிக்கும்பொழுது இதனை தனிநபர் கஷ்டம் என்று எடுத்துக்கொள்ளாமல் தாராளமாக பிறரிடம் உதவி கேட்கலாம் என்று நண்பர்கள் சொன்னார்கள்.

நீங்களும் புயல் நிவாரணத்தில் பங்குக்கொள்ளலாம். எனது வங்கிகணக்கை தந்து இருக்கிறேன். உங்களால் முடிந்த உதவியை மற்றும் உங்களின் நண்பர்களின் வழியாக பெறும் பணத்தை செலுத்தலாம். அனைத்து பணமும் புயல் நிவாரணத்திற்க்கு பயன்படுத்தப்படும். பொருள்கள் வழியாக உதவி செய்கிறேன் என்றால் என்னை தொடர்புக்கொண்டு செய்யலாம்.

நான் சொல்லிவிட்டேன் என்பதற்க்காக கஷ்டப்பட்டுக்கொண்டு பணம் அனுப்பவேண்டாம். உங்களிடம் பணம் இருந்தால் மட்டும் அதனை அனுப்புங்கள் அல்லது உங்களின் நண்பர்களின் வழியாக பணம் சேகரித்தும் அனுப்பலாம். புயல் நிவாரணம் என்பது உங்களின் வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை ஆன்மீக வழியாக சொல்லுகிறேன்.

வங்கி கணக்கு விபரம் 

KVB Bank :  Karur Vysya Bank
Branch : Pattukkottai
Name : RAJESH S
Account Type : Savings account.
A/C Number : 1623155000063470
IFSC Code : KVBL0001623

மேலும் விபரங்களுக்கு  தொடர்பு கொள்ளுங்கள்.

E-Mail ID : payrajeshsubbu@gmail.com

Cell No : 9551155800,8940773309 Whatapp : 9551155800

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 20, 2018

நன்றி

வணக்கம்!
          ஒவ்வொரு நாளும் மிகுந்த போராட்டத்தில் தான் வாழ்க்கை சென்றுக்கொண்டு இருக்கின்றது. இந்த போராட்டத்தையும் மீறி நமது நண்பர்களுக்கு தேவையான ஆன்மீக வழியில் உள்ள பிரச்சினையை தீர்த்துக்கொண்டு தான் இருக்கின்றேன். 

புயலால் பாதிப்படைந்து இருக்கின்றார் ஒன்றும் கேட்டவேண்டாம் என்று யாரும் இருக்கவேண்டாம். தாராளமாக அனைவரும் கேட்கலாம். மின் பிரச்சினை காரணமாக தான் பதிவை தொடர்ச்சியாக கொடுக்கமுடியவில்லை.

புயல் அடித்தபொழுது கடும் பாதிப்பை இந்த மாவட்டம் அடைந்தது. பல பேர்க்கு வெளியில் இந்த பாதிப்பு தெரியவில்லை என்று மட்டும் புரிகின்றது. வெளியில் இருந்து தொடர்புக்கொள்ளும் நண்பர்கள் இதனைப்பற்றி சொல்லுகின்றனர்.

பலர் என்னை தொடர்புக்கொண்டு என்ன உதவி வேண்டும் என்று கேட்டனர். உண்மையில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன். தொடர்பில் இருந்து பல வருடங்கள் சென்ற நண்பர்கள் கூட இந்த நேரத்தில் தொடர்புக்கொண்டது மகிழ்ச்சி. அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

நேற்று வரை சும்மா இருந்த இயற்கை இரவு முதல் காற்று வீச தொடங்கியது. இன்று மழை கூட வருவது போலவே இருக்கின்றது. அடுத்த புயலும் வரும் என்று சொல்லிருக்கின்றனர். அம்மன் அருளால் அதன் தாக்கம் குறையவேண்டும்.

ஆன்மீக வழியில் இருந்த காரணத்தால் தான் புயலின் பொழுது பெரும் சேதம் எனக்கு ஏற்படவில்லை. சேதம் என்பது பிறரை விட குறைவு. உங்களின் பிரச்சினையை வழக்கம் போல தொடர்புக்கொண்டு கேட்டுக்கொள்ளலாம். ஜாதக பலன் கேட்க அனுப்பிய நண்பர்களுக்கு மட்டும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும். விரைவில் அந்த சேவையும் தொடரும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Sunday, November 18, 2018

அறிவிப்பு

வணக்கம்!
          புயலின் தாக்கத்தால் கடும் பாதிப்பை தஞ்சாவூர் மாவட்டம் சந்தித்தது. எனது சொந்த ஊரும் கடும் பாதிப்பை அடைந்தது. ஏற்கனவே எனது ஊரை பார்த்தவர்களுக்கு தற்பொழுது பார்த்தால் அடையாளமே தெரியாத அளவுக்கு பாதிப்பு இருக்கின்றது.

அடிப்படையான வசதிகள் கூட தற்பொழுது கிடைக்கவில்லை. மின்கம்பங்கள் சரி செய்து மின்சாரம் கிடைப்பதற்க்கு கூட மாதகணக்கு ஆகும் என்று தோன்றுகின்றது. எப்படிப்பட்ட பிரச்சினை வந்தாலும் சமாளிக்கவேண்டும் என்ற தன்னம்பிக்கை உள்ளதால் போராடி மீண்டுவிடலாம். பல நண்பர்கள் என்னை தொடர்புக்கொண்டார்கள் அனைவருக்கும் நன்றி.

தொலைதொடர்பு பிரச்சினை இருக்கின்றது. அவ்வப்பொழுது தொலைதொடர்பு வேலை செய்வதால் இந்த பதிவை தரமுடிந்தது. பதிவை தொடர்ந்து தருவதற்க்கு அனைத்து முயற்சியும் எடுத்துக்கொண்டு இருக்கிறேன். விரைவில் மீண்டு வந்துவிடுவேன். அதுவரை பொறுமையாக இருக்கும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறேன்

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Thursday, November 15, 2018

இரண்டாவது வீடு


வணக்கம்!
          ஒருவருக்கு இரண்டாவது வீட்டை வைத்து தான் அந்த நபர்க்கு எந்த மாதிரியான குழந்தை பிறக்கும் என்பதை சொல்லலாம். ஐந்தாவது வீட்டை வைத்து குழந்தையை சொல்லுவார்கள் நீங்கள் இரண்டாவது வீட்டை வைத்து சொல்லுகின்றீர்கள் என்று கேட்கலாம்.

பெரும்பாலான ஜாதகர்களுக்கு இரண்டாவது வீட்டில் ஆண் இராசியாக வந்தால் முதல் குழந்தை ஆண் குழந்தையாக இருக்கும். பெண் இராசியாக இருந்தால் பெண் குழந்தையாக இருக்கும். இரண்டாவது வீட்டில் செவ்வாய் சம்பந்தப்பட்டால் அந்த நபர்க்கு பிறக்கும் அனைத்து குழந்தையும் ஆண் குழந்தையாகவே இருக்கின்றது.

ஒரு வீட்டில் அதிகபடியான பெண்கள் இருந்தால் அந்த குடும்ப தலைவரின் ஜாதகத்தில் இரண்டாவது வீட்டில் பெண் இராசியின் தாக்கம் அதிகமாக இருக்கும். இரண்டாவது வீடு என்பது குடும்பத்தை காட்டுவதால் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் எப்படி என்பதை காட்டக்கூடிய இடமாகவே இருக்கின்றது.

ஒரு சில ஜாதகத்தில் எந்த வீடு பலம் பெறுகின்றது என்பதை பொறுத்தும் இருக்கின்றது. ஒரு சில ஜாதகர்களுக்கு ஐந்தாவது வீடு பலம் பெற்றால் அந்த ஜாதகர்களின் வாரிசுகள் ஐந்தாவது வீட்டை பொறுத்து இருக்கும்.

ஒரு குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அதிகபட்சம் ஆண்களா அல்லது பெண்களா என்பதை பார்ப்பதற்க்கு இந்த விதியை பயன்படுத்தி பார்த்துக்கொள்ளலாம். ஒரு சிலருக்கு எந்த மாதிரியான வாரிசுகள் பிறக்கும் என்பதை சொல்லுவதற்க்கும் இது பயன்படும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Wednesday, November 14, 2018

கோவிலுக்கு செல்லகூடாது எப்பொழுது?


வணக்கம்!
          நாம் நிறைய தோல்விகளை சந்தித்து இருக்கும் காலக்கட்டத்தில் நாம் கோவில்களுக்கு செல்லக்கூடாது. பொதுவாகவே மனிதனின் மனம் தோல்வியை சந்திக்கும் காலக்கட்டத்தில் கோவில் பக்கம் மனம் செல்ல நினைக்கும். நீங்கள் கோவில் பக்கம் சென்றால் கண்டிப்பாக அந்த காலக்கட்டதில் உங்களுக்கு பிரச்சினை அதிகமாக தான் ஏற்படும்.

நம்மிடம் என்ன இருக்கின்றது என்பதை அறிந்து அந்த பலன் தான் அதிகமாக நமக்கு கிடைக்கும். கஷ்டக்காலத்தில் அனைவரும் செய்யும் தவறாகவே இது இருக்கும். நாம் கோவில் பக்கம் செல்லவேண்டாம் என்று சொன்னால் யாரும் கேட்ட மாட்டார்கள். பதிவுகளில் சொல்லிவிட்டால் கண்டிப்பாக கேட்பார்கள்.

கஷ்டக்காலக்கட்டத்தில் ஆன்மீகவாதிகளை சந்திப்பதை வைத்துக்கொள்ளலாம். ஏன் என்றால் இவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். கோவில்களை விட ஆன்மீகவாதி பெரியவர்களாக என்று கேட்கலாம். ஆன்மீகவாதிகள் பெரியவர்கள் கிடையாது தான் ஆனால் அவர்கள் உங்களுக்கு சரியான ஒரு அறிவுரை அல்லது காப்பாற்றமுடியும்.

கஷ்டக்காலத்தில் வனப்பகுதிகளில் இருக்கும் கோவில்களுக்கு சென்று வரலாம். வனப்பகுதிகளில் இருக்கும் கோவில்களில் உங்களின் உடலை தூய்மைப்படுத்தி ஆத்மாவிற்க்கு பலன் சேர்த்து உங்களின் கஷ்டத்தை போக்க வழி வகுக்கும்.

கஷ்டம் வந்துவிட்டால் பொறுமையாக இருந்து உங்களை மேம்படுத்த என்ன வழி என்பதை பார்த்து செய்யவேண்டும். கோவில்களுக்கு நீங்கள் சந்தோசமாக இருக்கும் காலக்கட்டத்தில் சென்றுவந்தால் அது பெரியளவில் நல்லது செய்யும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

Tuesday, November 13, 2018

அம்மன் பூஜை படங்கள் பகுதி 3

வணக்கம்!
          நேற்று நடைபெற்ற அம்மன் பூஜை படங்கள்.



அன்புடன்
ராஜேஷ்சுப்பு