Followers

Friday, February 2, 2018

கண்திருஷ்டி ராசி பகுதி 4


வணக்கம்!
          கன்னி ராசி
                      விதவிதமாக ஆடைகளை அணிந்துக்கெண்டு செல்வது. உலகவிசயமே எனக்கு தெரியும்டா என்று வெளியில் காட்டிக்கொள்வது. விஞ்ஞானி போல பேசுவது அடுத்தவர்களிடம் நட்பாக பழகுவது இது போன்ற வழியில் உங்களுக்கு கண்திருஷ்டி ஏற்படும்.

நீங்கள் கடன் கேட்டால் உடனே கிடைத்துவிடுகின்றது என்று உங்களை பார்த்து உங்களின் வீட்டில் உள்ளவர்களே பொறாமைப்படுவது. உங்களின் மனைவி உங்களின் திறமையை கண்டு பொறாமைக்கொள்வது போன்றவற்றால் உங்களுக்கு கண்திருஷ்டி ஏற்படும்.

எப்படி திருஷ்டி கழிப்பது
                        ஒரு தேங்காய் வாங்கிக்கொள்ளுங்கள். குடுமியை எடுத்துவிட்டு அதனை வைத்து உங்களின் மேல் இடது புறமாக மூன்று சுற்று வலது புறமாக மூன்று சுற்று சுற்றிவிட்டு அதனை கொண்டு சென்று ரோட்டில் அதனை சிதறுகாய் போல உடைத்துவிடுங்கள். ஒரு புதன்கிழமை அல்லது ஞாயிற்றுகிழமையில் இதனை செய்யலாம்.

துலாம் ராசி
            
             எப்படி இப்படி ஒரு அழகாக உடை அணிகிறார். எவ்வளவு அழகாக இருக்கின்றார். அனைவரிடமும் நட்பாக பழகுகின்றார். யாரை பார்த்தாலும் அன்பாக பேசுகின்றார் என்று பிறர் கண் வைப்பார்கள்.

சொகுசு வாழ்க்கை நீங்கள் வாழ்வது போல பிறர்க்கு தெரியும். ஓசியில் காரில் சென்றாலும் உங்களின் சொந்த கார் என்று பிறர் நினைப்பார்கள். சொகுசுவீட்டில் வாழ்வது போல் பிறர்க்கு தெரியும் இதனை பார்த்தும் கண் வைப்பார்கள்.

எப்படி திருஷ்டி கழிப்பது?
                          ஒரு எலுமிச்சைபழத்தை எடுத்து உங்களின் உடலில் படும்படி வலபுறமாக மூன்று சுற்று இடபுறமாக மூன்று சுற்று சுற்றுங்கள். (சுற்று என்று உங்களிடம் நான் இந்த இடத்தில் கூறுவது உங்களின் உடலில் படும்படி தேய்ப்பதை சொல்லுகிறேன்) அதனை ரோட்டில் கொண்டு சென்று அதன் மேல் ஒரு தீபத்தை ஏற்றிவிட்டு அதனை அப்படியே விட்டுவிட்டு வந்துவிடுங்கள்.

தீபம் ஏற்றமுடியவில்லை என்றால் எலுமிச்சைபழத்தை அப்படியே அறுத்து வீசிவிட்டு வந்துவிடுங்கள். உங்களின் கண்திருஷ்டி போய்விடும். வெள்ளிக்கிழமையில் இதனை செய்யலாம்.

தொடர்புக்கு :  9551155800, 8940773309 
What'sApp Number: 9551155800 


அன்புடன்
ராஜேஷ்சுப்பு

3 comments:

Kalairajan said...

அய்யா
விளக்குக்கு பதில் கற்பூரம் ஏற்றலாமா?

rajeshsubbu said...

கற்பூரமே ஏற்றுங்கள் ஐயா

Kalairajan said...

நன்றி