Followers

Tuesday, February 6, 2018

கண்திருஷ்டி ராசி பகுதி 6


வணக்கம்!
          மகரராசி
                   உங்களின் கடுமையான உழைப்பை பார்த்து பிறர் வியந்து கண்திருஷ்டி வைப்பார்கள். உங்களின் பண வளர்ச்சியை பார்த்து பிறர் கண்வைப்பார்கள். எளிமையாக இருந்துக்கொண்டு பல கோடிகளை சம்பாதித்துக்கொண்டு இருக்கின்றார் என்று பிறர் கண்வைப்பார்கள்.

உங்களின் பொறுமையை பார்த்து கூட உங்களின் துணையாக இருப்பவர்கள் கூட உங்களின் மேல் கண்வைப்பார்கள். எந்த நிலையிலும் மனதளராமல் வேலை செய்யக்கூடிய அழகை பார்த்து பிறர் கண் வைப்பார்கள்.

எப்படி திருஷ்டி கழிப்பது
                        காய்ந்த வேப்பிலை இலை வைத்து நெருப்பை மூட்டி அந்த புகையை வீடு முழுவதும் போடுங்கள். காய்ந்த மிளகாய் ஆறு சாம்பிராணி மற்றும் கொஞ்சம் உப்பை நெருப்பில் போட்டு அந்த நெருப்பை முச்சந்தியில் அல்லது உங்களின் தெருவில் போட்டுவிடுங்கள்.

கும்பராசி

        உலகவிசயமே உங்களுக்கு தெரிகிறது என்று பிறர் கண்வைப்பார்கள். படிக்காமல் இருந்தால் கூட இவ்வளவு அறிவோடு இருக்கிறார் என்று பார்த்து பிறர் கண் வைப்பார்கள். எளிமையாக இருந்தாலும் நல்ல ஆடைகளை உடுத்தவேண்டும் என்று நினைத்து அணிவீர்கள் அதனை பார்த்து பிறர் கண்வைப்பார்கள்.

எனக்கு மரியாதை தரவேண்டும் என்னை மதிப்பவர்களை தான் நான் மதிப்பேன் என்று விடாபிடியாத குணத்தை பார்த்து கூட பிறர் உங்களின் மேல் கண் வைப்பார்கள்.

திருஷ்டி எப்படி கழிப்பது
                         எலுமிச்சை பழத்தை எடுத்து நீங்கள் தூங்கும் அறையில் வைத்துவிடுங்கள். ஒரு வாரம் சென்று அந்த எலுமிச்சை பழத்தை எடுத்துக்கொண்டு தெருவில் வீசி எறிந்துவிடுங்கள்.

சாம்பிராணி புகையை நன்றாக உங்களின் வீட்டில் போடுங்கள். ஒரு தேங்காயை வாங்கி வந்து உங்களை சுற்றி விட்டு வலது புறமாக மூன்று சுற்று இடது புறமாக மூன்று சுற்று சுற்றிவிட்டு அந்த தேங்காயை சிதறகாய் போல உடையுங்கள்.

மீன ராசி
         வாழ்க்கையில் பிறர் கஷ்டப்படுவார்கள் நீங்கள் சொகுசாக வாழ்க்கையை அனுபவிக்கின்றீர்களே என்று பிறர் உங்களை பார்த்து கண் வைப்பார்கள். எப்படிப்பட்ட நிலையிலும் பிறர் சம்பாதித்து உங்களுக்கு பணம் கொடுக்கின்றீர்களே பிறர் கண் வைப்பார்கள்.

அப்பன் அல்லது தாத்தா சொத்து சம்பாதித்தை அனுபவிக்கின்றீர்களே என்று பிறர் உங்களை பார்த்து கண் வைப்பார்கள். நன்றாக ஆடைகளை உடுத்திக்கொண்டு செல்வதை பார்த்து பிறர் கண் வைப்பார்கள்.

எப்படி திருஷ்டி கழிப்பது
                         ஒரு சூடத்தை எடுத்துக்கொண்டு உங்களை மூன்று சுற்று சுற்றி அதனை எடுத்துக்கொண்டு தெருவில் அதனை போட்டு அதனை ஏற்றிவிட்டு வந்துவிடுங்கள். அது அப்படியே எறிந்துமுடித்துவிடும். உங்களி்ன கண்திருஷ்டியும் போய்விடும்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: