Followers

Thursday, February 22, 2018

குரு


வணக்கம்!
         நமது ஜாதககதம்பத்தை படிக்கும் நபர்கள் அதிகம் பேர் குரு தசாவில் இருப்பார்கள். குரு தசா நடக்கும்பொழுது நாம் ஏதாவது ஒரு குருவை நாடி சென்று தான் ஆகவேண்டும். குருவை நாடி சென்று அவர்களின் போதனைகளை கேட்டு அவரை பிடித்து இருந்தால் அவரை பின்பற்றலாம்.

ஒரு குருவை நாம் நாடி சென்றுவிட்டால் அதன் பிறகு அவரோடு தொடர்பில் எந்த வித குறையும் இல்லாமல் நாம் நடந்துக்கொண்டால் தான் நன்றாக  இருக்கும். குருவிடம் நாம் தேவையில்லாம் பொய் சொல்லுவது ஏதாவது வில்லங்கத்தை நாம் செய்துவிட்டு வந்தால் அது குருவின் சாபத்தை நமக்கு ஏற்பட்டுவிடும்.

குரு தசா நல்லதும் நடக்கும் தீமையையும் நடக்க வைக்கும். ஒரு குருவிடம் மட்டும் நாம் சாபம் வாங்கிவிட்டால் அது பல தலைமுறைக்கு தீராத பிணியாக நம்மோடு வந்துக்கொண்டே இருக்கும்.

பல இடத்திலும் நான் பார்த்ததை தான் சொல்லுகிறேன். குருவின் சாபத்தை வாங்கிவிட்டால் நமது தலைமுறைக்கு பெரிய ஒரு பிரச்சினையை கொடுக்கும். ஒரு நல்லதையும் நம்முடைய குடும்பத்தில் நடக்காது.

குருவிடம் மிகுந்த பக்தியோடு இருங்கள். அவர் சொல்லுதை கேட்கவிட்டாலும் அவரிடம் நடந்துக்கொள்ளும் விதத்தை சரியாக பின்பற்றி பாருங்கள். குருவே தவறு செய்தாலும் அவரைப்பற்றி எந்தவிதத்திலும் நீங்கள் வெளிக்காட்டிக்கொள்ளாதீர்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: