Followers

Wednesday, February 21, 2018

தீயகிரகங்களின் காலங்களில்


வணக்கம்!
          உங்களுக்கு தீயகிரகங்களின் பலன் நடைபெறுகிறது என்றால் அந்த காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் முடிவும் உங்களை சுற்றி இருப்பவர்களின் செயல்பாடும் நல்லதாக இருக்காது. நமக்கு நேரம் சரியில்லை என்றால் முதலில் உங்களின் வீட்டில் உள்ளவர்கள் மற்றும் அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உங்களுக்கு எதிராக செயல்படுவார்கள்.

ஏழரை சனி நடக்கும் காலத்தில் கூட இதனை நீங்கள் தெரிந்துக்கொள்ளமுடியும். உங்களின் செயல்பாடு உங்களுக்கே பிடிக்காமல் இருக்கும். நீங்கள் நினைப்பது அனைத்தும் ஒன்றுமே நடக்காது. இந்த காலக்கட்டத்தில் செயல்படாமல் இருப்பது நல்லது என்றாலும் இன்றைய அவசரகாலத்தில் செயல்பட்டு தான் ஆகவேண்டும்.

கெட்டகாலத்தில் ஒன்றைச்செய்யவேண்டும் அதாவது உங்களின் பழக்கவழக்கத்தில் கொஞ்சம் மாறுதல் செய்யவேண்டும். பேசிக்கொண்டே இருக்காமல் நிதானமாக பேசவேண்டும். அவசியம் ஏற்பட்டால் மட்டுமே பேசவேண்டும். 

உடைகளில் அதிக கவனம் செலுத்தாமல் சாதாரணமான ஆடைகளை  அணிந்துக்கொண்டு இருப்பது நல்லது. அதோடு நம்முடைய குலதெய்வம் மற்றும் இஷ்டதெய்வத்தின் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்துக்கொண்டே இருப்பது நல்லது.

மது அருந்தும் நபர்களுக்கு கொஞ்சம் மதுவை வாங்கிக்கொடுப்பது கூட நல்லது செய்யும். ஏழரை சனி மட்டும் இல்லை எல்லா தீய கிரகங்களின் தசா மற்றும் கோச்சார காலங்களிலும் இதனை செய்வது நல்லது. ஆறு மாதத்திற்க்கு ஒரு முறை இதனை செய்யலாம்.

உடல் பரிசோதனையை அடிக்கடி எடுத்துக்கொள்வது நல்லது. ஏதாவது ஒரு நோய் வந்துக்கொண்டே இருக்கும் அதனை முன்கூட்டியே தவிர்ப்பதற்க்கு வழி உங்களுக்கு தோன்றும் என்பதால் இதனை செய்துக்கொள்வது நல்லது.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: