Followers

Friday, February 9, 2018

ஜாதக அனுபவம்


ணக்கம்!
          நேற்று நாம் அஸ்வினி நட்சத்திரத்தில் சந்திரன் சென்றால் என்ன பலன் கிடைக்கும் என்பதைப்பற்றி சொல்லிருந்தேன். சந்திரனுக்கு சனியின் பார்வை கிடைத்தால் எப்படி இருக்கும். சந்திரனுக்கு சனியின் பார்வை கிடைத்தால் அது தீமையை தரும் நாம் சொல்லுவோம்.

சனியின் பார்வை எங்கிருந்து பார்க்கிறது மற்றும் அது எந்த பார்வை என்பதையும் முடிவு செய்து பலனை சொல்லவேண்டும். அப்பொழுது தான் பலனை சரியாக தீர்மானிக்கமுடியும்.பொதுவான பலனாக சொல்லவேண்டுமானால் அவர்க்கு திருமணத்தில் மட்டும் கொஞ்சம் பிரச்சினை வரும் என்று சொல்லலாம்.

சனி மற்றும் கேதுவின் நட்சத்திரத்தில் சந்திரனுக்கு கிடைக்கும்பொழுது வாழ்க்கையில் நிறைய போராட்டங்களை சம்பந்தப்பட்டவர் சந்திப்பார்கள். நிறைய மனபோராட்டங்கள் என்று சொல்லலாம். காதல் தோல்வியும் அடைவார்கள்.

சனியின் பார்வை தீமை என்பதாலும் கேதுவின் நட்சத்திரத்தில் கேது செல்வதால்  திருமணவாழ்வில் பிரச்சினை என்பதை சொல்லலாம். திருமணத்தை காலம் தள்ளி வைத்துக்கொள்ளலாம் அல்லது தன்னைவிட கீழ் ஜாதியில் உள்ளவர்களை திருமணம் செய்துக்கொள்ளலாம்.

இளைமையில் திருமணம் முடித்தால் உங்களுக்கு விவாகாரத்து கிடைப்பதற்க்கு வழி வகுக்கும். ஒரு சிலருக்கு துணைவர் இறக்க கூடும் அல்லது மனநிலையில் பாதிப்படைய செய்யும். ஏழாவது வீடு நல்ல பலனை கொடுத்து ஏழாவது அதிபதி அதிக பலன் பெற்றால் கொஞ்சம் சண்டை சச்சரவை மட்டும் தரும். அவ்வப்பொழுது சண்டை வந்து போகும்.

இதற்கு பரிகாரமாக மனநிலையை வலுப்படுத்த வேலையை செய்யலாம். நல்ல கோபமாக இருக்கும் அம்மனை தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் நல்லது நடக்கும். குலதெய்வத்தையும் தொடர்ச்சியாக வழிபட்டு வந்தால் அவர்களுக்கு நல்லது நடக்கும்.

மேலே உள்ள நிலையில் குரு கிரகம் பார்த்தால் பெரும்பாலும் பிரச்சினை குறையும். குரு கிரகம் பார்த்தால் அதிகப்பட்சமான பிரச்சினை குறைவதற்க்கு வாய்ப்பு அதிகம் இருக்கும். மேலே சொன்னபடி உங்களுக்கு அமைந்தால் ஆன்மீகத்தில் நல்ல நிலையில் இருப்பார்கள் என்று சொல்லலாம். நிறைய கோவில் தரிசனங்கள் உங்களுக்கு கிடைக்கும்.

இன்று அம்மன் பூஜை நடைபெறுகிறது. அம்மன் பூஜை என்பதால் உங்களின் வேண்டுதல்களை அம்மனிடம் வைக்கலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: