Followers

Wednesday, April 11, 2018

சிறப்பு பதிவு 11


ணக்கம்!
              மனிதனுக்கு முப்பது வயதிற்க்கு மேல் வருகின்ற வியாதி ஒன்று இருக்கின்றது. நிறைய விசயங்களை தன் மனதிற்க்குள் போட்டு குழப்பிக்கொள்வதால் அவர்களுக்கு மனநோய் தாக்கும். நம்மிடம் ஒருவர் பேசினால் நாம் அதனை கவனிக்காமல் வேறு சிந்தனையில் இருப்போம். முப்பது வயதில் இருந்து நாற்பது வயதிற்க்குள் கண்டிப்பாக இது வந்தே தீரும்.

இந்த நோய் வந்துவிட்டால் இதயமும் வேலை செய்வதில் பல குளறுபடிகளை செய்ய ஆரம்பித்துவிடும். இதய இரத்தம் அழுத்தம் ஏற்படுவதற்க்கு காரணமாக இந்த நோய் இருக்கும். இரவிலும் ஒழுங்காக தூங்கமுடியாது. இதயம் அடைபடுவது போல இருக்கும். இது கொஞ்சம் ஒவராக சென்றுவிட்டால் உடலுக்கு கெடுதலை தரும்.

நம்முடைய மனது பலதை போட்டு குழப்பிக்கொண்டு அல்லது ஒரே எண்ணத்தை வைத்துக்கொண்டு அது நிறைவேறவில்லை என்று நினைத்துக்கொண்டு இருப்பதால் இந்த நோய் வந்துவிடுகின்றது. பலருக்கு இது இருக்கும் ஆனால் நாம் அதனை ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

நம்முடைய மனதில் இப்படிப்பட்ட எண்ணங்களை முப்பது வயதிற்க்கு மேல் தான் அதிகமாக உருவாக்குகிறது என்றாலும் இதற்கும் ஒவ்வொருவரின் ஜாதகத்திற்க்கும் நிறைய தொடர்பு இருக்கின்றது. ஜாதகத்தில் பாதகமாக கிரகங்கள் வேலை செய்தால் அவர்களுக்கு இப்படிப்பட்டபிரச்சினை வருகின்றது.

எனக்கும் இப்படிப்பட்ட பிரச்சினை இருந்து இருக்கின்றது. எனக்கு எப்படி இந்த பிரச்சினை வந்தது என்றால் எனக்கு நிறைய எண்ணங்கள் ஓடிக்கொண்டு இருக்கும். அதற்கு வடிகாலாக ஜாதககதம்பத்தில் எழுதிக்கொண்டு இருப்பேன். எது உதித்தாலும் அதனை வெளிக்காட்டிக்கொண்டுவிடுவது உண்டு. நிறைய எண்ணங்கள் உருவாகி வடிகாலாக இருக்கும் பதிவுகள் போடுவதற்க்கு முடியாமல் போன காரணத்தால் தான் இப்படிப்பட்ட பிரச்சினை வந்தது.

உங்களுக்கு உங்களின் எண்ணத்திற்க்கு தகுந்தமாதிரி இந்த பிரச்சனை வந்திருக்கும். எனக்கு வந்த பிரச்சினை எது என்பதை அறியவே எனக்கு நிறைய காலம் தேவைப்பட்டது. எதில் இருந்து இந்த பிரச்சினை வந்தது என்று கண்டுபிடிக்க நிறைய காலம் தேவைப்பட்டது. ஜாதகத்தில் இருந்து பிரச்சினை வந்தாலும் எதனால் வந்தது என்பதை கண்டுபிடிக்க காலம் தேவைப்பட்டது. உங்களுக்கும் இப்படிபட்ட காலம் தேவை அப்பொழுது தான் அதற்கு சரியான விடையை கண்டுபிடிக்க இயலும்.

மேலே சொன்ன பிரச்சினை சாதாரணமான பிரச்சினை இல்லை. ஜாதக கதம்பத்தை படிக்கும் அனைவரும் இதனை சந்தித்து இருக்கலாம். பிரச்சினையின் தீவிரம் அதிகம் அல்லது குறைவாக இருக்குமே தவிர சந்திக்காமல் இருந்து இருக்க மாட்டீர்கள்.

நான் சந்திக்கும் ஒவ்வொரு நபர்களும் இதனைப்பற்றி சொல்லிருக்கின்றனர். ஒரு சிலருக்கு இதயத்தை போட்டு அமுக்குவது போல இருக்கின்றனர். ஒரு சிலர் அதிகமான தலைவலி என்று சொல்லிருக்கின்றனர். ஒரு சிலர் மயங்கி விழுந்து இருக்கின்றனர்.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் பாதிப்படைந்து இருக்கின்றனர்.

ஒவ்வொரு மனிதனுக்கும் வடிகால் என்ற ஒன்று நன்றாக இருந்தால் தான் அந்த மனிதன் அதிக நாள் நன்றாக வாழமுடியும். வடிகால் என்பது மறைவுஸ்தானத்தை குறிக்கும் ஒரு இடமாகவே இருக்கும். வடிகால் நன்றாக இருக்கும்பட்சத்தில் இந்த பிரச்சினை வரவே வராது. அதே நேரத்தில் வடிகால் தடைப்பட்டால் அவனுக்கு இந்த பிரச்சனை அதிகமாக வந்துவிடும்.

எடுத்துகாட்டாக நீங்கள் ஆணாக இருந்தால் உங்களுக்கு வடிகால் நிறைய ஏற்படுத்திக்கொள்ள முடியும் அதே நேரத்தில் உங்களின் மனைவிக்கு வடிகால் குறைவாகவே இருக்கும். அவர்களை அடக்கி ஆழவைப்பதில் நீங்கள் அதிகமாக கவனம் செலுத்தினால் அவர்கள் கண்டிப்பாக இப்படிப்பட்ட பிரச்சினையை அதிகம் சந்திப்பார்கள்.

நீங்கள் என்னதான் உங்களின் மனைவிக்கு சுதந்திரம் கொடுத்து இருந்தாலும் உங்களின் மனைவிக்கு என்று ஒரு தனிப்பட்ட விசயம் இருக்கும். உங்களை கண்டு அந்த தனிப்பட்ட விசயத்தை அவர்கள் செய்யாமல் இருப்பார்கள் அது அவர்களுக்கு பிரச்சினை தரும்.

உலகத்தில் உள்ள முக்கால்வாசி பிரச்சினைக்கு மறைவுஸ்தானம் தான் காரணம் என்றும் சொல்லும் சோதிடர்களை விட இந்த மறைவுஸ்தானம் மனிதர்களை ஆராேக்கியமாக வாழவைக்கும் என்று சொல்லும் சாேதிடர்கள் உயர்ந்து நிற்பார்கள்.

பெண்கள் தான் இதில் அதிகம் பாதிப்படைகின்றனர் என்று சொல்லமுடியாது ஆண்களும் இதில் அதிகம் பாதிப்படைகின்றனர். அவர்களுக்கும் இந்த பிரச்சினை என்பது இருக்கின்றது. அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் மாட்டிக்கொள்கின்றனர்.

மறைவுஸ்தானத்தை எப்படி கையாண்டால் எப்படி நன்மை தரும் என்பதைப்பற்றி நாம் கட்டண சேவையில் நிறைய பார்க்கலாம். மேலே சொன்ன மாதிரி உங்களுக்கு பிரச்சினை இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது. இதில் உள்ள பல விசயங்களை கட்டண சேவையில் பார்க்கலாம்.



என்னிடம் நெருங்கிய உறவு இருக்கின்றது. இவரின் கட்டண சேவையில் நாம் இணையாவிட்டால் நமக்கு அந்த உறவு நிலைக்காது என்று ஒரு சில நண்பர்கள் கருதுகின்றனர். இதனை என்னிடம் ஒருவர் சொன்னார். என்னிடம் பணம் தற்பொழுது இல்லை நீங்கள் கோபித்துக்கொள்ளாதீர்கள் என்றார்.

நீங்களும் நானும் உறவு என்பது பணம் மட்டும் இருந்தால் இத்தனை வருடங்கள் இது எல்லாம் சாத்தியப்பட்டு இருக்காது. பணத்தை தாண்டி பல விசங்களில் நான் ஒத்துபோவதால் தான் இன்றைக்கும் இதனை எழுத முடிகிறது. பல பேரை நட்பாக இருக்க வைத்திருக்கின்றது. என்னுடைய சுயதேவைக்கு பணம் தேவைப்படுவதால் என்னுடைய திறமையை காட்டி ஒரு கட்டணசேவையை துவங்குகிறேன். பணம் இருப்பவர்கள் சிறப்பு பதிவு பிடித்து இருந்தால் என் மீது நம்பிக்கை வைத்து இணைந்துக்கொள்ளலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: