Followers

Tuesday, April 17, 2018

நாேய்களுக்கு தீர்வு


ணக்கம்!
          எனக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு இரத்த அழுத்தம் அதிகமாக சென்றுவிட்டது. 200 யை தொட்டுவிட்டது. எனக்கு பெரியளவில் பிரச்சினை எதுவும் வரவில்லை என்றாலும் கொஞ்சம் நெருடலாக இருந்தது. 

எனக்கு மனஅழுத்தம் இருக்கின்றது என்று சொன்னவுடன் தெரிந்த நண்பர்கள் சிரித்துவிட்டார்கள். எப்படி உங்களுக்கு மனஅழுத்தம் வந்தது. கண்டிப்பாக எனக்கும் ஏதோ ஒரு வகையில் இந்த மனஅழுத்தம் இருந்து வந்திருக்கின்றது அது பெரியளவில் வெளிப்பட்டு இருக்கின்றது.

ஒரு மருத்துவரிடம் இதனைப்பற்றி கேட்டவுடன் உங்களுக்குள் என்ன பிரச்சினை என்று கேட்டார். எனக்கு எதுவும் தெரியவில்லை என்று தோன்றியது. நான் அவரிடம் எந்த பிரச்சினையும் இல்லை என்று சொன்னேன். 

அவர் ஒரு நல்ல மருத்துவர். நான் அலோபதி மருத்துவரிடம் சென்று காட்டுவதில்லை. பரிசோதனை செய்வதற்க்கு மட்டும் அலோபதி மருத்துவனையை நாடுவது உண்டு மற்றபடி அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது கிடையாது.

இது ஒரு தனிப்பட்ட மருத்துவம். அவர் என்னிடம் தற்பொழுது உங்களுக்கு கிரக நிலை எப்படி சென்றுக்கொண்டு இருக்கின்றது என்றார். ஒரு கிரகம் மட்டும் சரியில்லாமல் சென்றுக்கொண்டு இருக்கின்றது என்றேன். அதனை புரிந்துக்கொண்டு அவர் மருந்துக்கொடுத்தார். தற்பொழுது சரியாகிவிட்டது.

ஒரு மருத்துவர்க்கு சோதிடமும் தெரிந்தால் தான் அவர் சரியான ஒரு மருத்துவ ஆலோசனையை கொடுக்கமுடியும். இந்த மருத்துவரை நாடுவதற்க்கு முன்பு நான் சம்பந்தப்பட்ட கிரகத்திற்க்கு ஒரு தீபம் ஏற்றி வழிபட்டு அதன்பிறகு இரண்டு நாட்கள் சென்ற பிறகு மருத்துவரை சென்று பார்த்தேன்.

எனக்கும் ஒரு மந்தப்புத்தி இருந்தது. இந்த கிரகம் பிரச்சினை கொடுக்கும் என்று முன்கூட்டிய அறிந்து அதனை கட்டி வேலை செய்து இருக்கவேண்டும். அதனை விட்டுவிட்டு அதனை கண்காணித்தேன். எப்படி பிரச்சினை வேலை செய்யும் என்று கவனித்தேன்.

நமக்கு வரும் பிரச்சினைக்கு அதாவது நோய்களுக்கு மருத்துவரை நாடி தான் ஆகவேண்டும். மருத்துவர்கள் தினமும் எப்படியும் நமக்கு நோயாளிகள் வரவேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொண்டே இருப்பார்கள். அதனாலேயே நன்றாக இருப்பவர்களுக்கும் நோய் வந்துவிடுகின்றது. ஐந்து லட்சம் செலவு செய்து அலோபதியில் பார்க்கும் வைத்தியத்தை ஆயிரம் ரூபாயில் சோதிடம் மற்றும் மருத்துவத்தில் பார்த்து சரி செய்துவிடலாம்.

ஏழரை சனி அஷ்டமசனி அர்த்தாஷ்டமசனி,ஆறாவது வீட்டு தசா, புத்தி மற்றும் தீயகிரகங்கள் உங்களுக்கு பிரச்சினை கொடுக்கும்பொழுது நோய்கள் வரும். இதனை எப்படி சரி செய்யலாம். எந்த மாதிரியான மருத்துவத்தை நாடுவது என்பதை நமது கட்டண பதிவில் இன்று சொல்ல இருக்கிறேன்.உடனே கட்டணபதிவில் இணைந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: