Followers

Friday, April 20, 2018

இராகு


வணக்கம்!
          ஒருத்தருக்கு கஷ்டக்காலம் இருக்கின்றது என்றால் அவர்க்கு சோதிடத்தில் அதிகமான தோஷம் இருக்கின்றது என்றாலும் அவர்கள் என்னை தொடர்புக்கொள்வது அதிகபட்சமாக இராகு காலம் அல்லது எமகண்ட நேரம் போன்றவற்றில் தொடர்புக்கொள்வார்கள்.

ஒருத்தருக்கு அமையும் யோகம் அப்படிப்பட்டது. இராகுவின் தொழிலை கொண்டவர்களும் இந்த நேரத்தில் என்னை தொடர்புக்கொள்வார்கள். இராகுவின் தொழிலில் கொடிக்கட்டு பறப்பவர்கள் எல்லாம் இந்த நேரத்தில் தான் தொடர்புக்கொள்வார்கள்.

நல்ல சம்பாதிப்பவர்களும் கெட்டவர்களுக்கும் இராகு தன்னுடைய பங்கை அதிகம் ஜாதகத்தில் கொடுத்தவர்களாக இருக்கின்றது. ஒரு சிலருக்கு இராகுவின் தோஷம் இருந்தாலும் இந்த நேரத்தில் என்னை தொடர்புக்கொள்வார்கள்.

இன்று வெள்ளிக்கிழமை காலை இராகு காலத்தில் நிறைய பேர்கள் இராகுவின் தொழிலை செய்பவர்கள் இராகுவால் பாதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தொடர்புக்கொண்டனர். அதனை வைத்தே நாம் சோதிடப்பலனை சொல்லிவிடமுடியும்.

உங்களை தொடர்புக்கொள்வதில் என்ன இருக்கின்றது என்று நீங்கள் நினைக்கலாம். உங்களை தொடர்புக்கொள்வர்களின் நேரத்தை நீங்கள் கவனித்து பார்த்தால் அவர்கள் என்ன செய்துக்கொண்டு இருப்பார்கள் என்பது உங்களுக்கு புரியும்.

இராகுவைப்பற்றி பல தகவல்களை ஜாதககதம்பத்தின் கட்டணசேவையில் சொல்ல போகிறேன். இன்று இராகு காலத்தைப்பற்றிய பதிவை எழுதியிருக்கிறேன். உடனே அதில் இணைந்து மேலும் பல தகவல்களை பெறுங்கள்.

நாளை பழனி செல்கிறேன். நாளை மாலை பழனியில் இருப்பேன்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: