Followers

Wednesday, April 4, 2018

ஜாதக அனுபவம்


வணக்கம்!
          நம்முடைய புதிய கட்டண தளத்தில் இணைவதற்க்கு பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒவ்வொருவரும் கட்டணத்தை செலுத்திவிட்டு தொடர்புக்கொள்ளுங்கள். விரைவில் புதிய தளம் ஆரம்பிக்கப்படுகின்றது.

இங்கே படிக்கும் அனைவருக்கும் ஜாதகம் பார்க்க நன்றாக தெரியும் ஆன்மீகத்திலும் நல்ல நிலையில் இருப்பீர்கள். நீங்கள் எப்படி இருந்தாலும் உங்களின் சொந்த பிரச்சினைக்கு என்று தனியாக ஒருவரிடம் சென்று ஆலோசனை கேட்பது மிகவும் நன்றாக இருக்கும்.

நாம் என்ன தான் சோதிடத்தில் புலியாக இருந்தாலும் நமக்கு என்று வரும்பொழுது ஒரு சில முக்கியமான விசயங்களை கிரகங்கள் நம்மிடம் காண்பிக்காமல் மறைத்துவிடும். நாம் அதில் சிக்கி மாட்டிக்கொள்வோம்.

நமக்கு தொந்தரவு கொடுக்கும் கிரகம் தன்னை மறைத்துக்கொண்டு நம்மிடம் அதனை வெளிப்படுத்தாமல் நமக்கு பிரச்சினையை கொடுத்துக்கொண்டு இருக்கும். அதனை நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டுவிடுவோம் அது பூதகரமாக மாறி நம்மை காலி செய்துவிடும்.

ஒவ்வொருவரும் பிறரிடம் ஆலோசனை கேட்பது தவறில்லை. நமக்கு நன்கு தெரிந்தாலும் பிறரிடம் ஆலாேசனை கேட்டால் அதற்கு ஒரு விடை கிடைத்துவிடும். அதன் பிறகு அவரின் உதவி மற்றும் தன்னுடைய அறிவை வைத்து அதனை சரிசெய்துவிடலாம்.

அன்புடன்
ராஜேஷ்சுப்பு

No comments: